More
Categories: Cinema News latest news

ஆதி குணசேகரனே வேணாம்.. டிவி தொடரின் ஆச்சரிய முடிவு… அப்போ சீரியல் கதி என்னவோ?

Ethirneechal: பிரபல சன் டிவி சீரியல் எதிர்நீச்சலில் நடித்தவர் மாரிமுத்து. திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதனை அடுத்து அந்த கேரக்டரில் யார் நடிக்க போகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் சீரியல் குழு வித்தியாசமான ரூட்டை கையில் எடுத்து இருக்கிறது.

ஒரே சீரியல் ஓஹோ வாழ்க்கை என்ற வரிக்கு பெர்பெக்ட் எடுத்துக்காட்டாக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. எத்தனை படத்தில் நடித்தாலும், சில படம் இயக்கினாலும் கிடைக்காத புகழ் ஒரே சீரியலால் அவருக்கு கிடைத்தது. ஆனால் அதை ரொம்ப நாட்கள் அனுபவிக்க முடியாமல் திடீரென உயிரிழந்தார்.

இதையும் படிங்க: அவருக்காக அட்ஜெஸ்ட் பண்ணனும்னு நினைச்சேன்!.. மேடையிலேயே ஓப்பனா சொன்ன இனியா!.

ராஜ்கிரணிடம் உதவியாளராக இருந்த மாரிமுத்து. பின்னர் படிப்படியாக கிடைத்த பழக்கத்தினை வைத்து இயக்குனர் சரண் மற்றும் எஸ்.ஜே.சூர்யா விடம் அசோசியேட்டாக வேலைக்கு மாறினார். சில படங்களை இயக்கியவர். பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்தார். இந்த நேரத்தில் தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த எதிர்நீச்சல் சீரியல் கிடைத்தது.

குணசேகரன் என்னும் வில்லனாக நடித்தாலும் அவரின் நடிப்புக்கு எல்லா தரப்பினருமே ரசிகர்களாக இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அவர் திடீரென மாரடைப்பால் இறந்தார். இது எல்லாரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் ஆதி குணசேகரனாக மாரிமுத்து தான் நடிக்க வேண்டும் என கலாநிதி மாறனே ஐடியா கொடுத்து இருக்கிறார். அவர் சொல்லியதன் பேரில் தான் இவருக்கு இந்த வாய்ப்பு வந்து இருக்கிறது.

இதையும் படிங்க: ஹிட் பட விழாவில் நம்பியார் அடித்த கமெண்ட்!.. பதில் கவுண்ட்டர் கொடுத்து அசரவைத்த எம்.ஜி.ஆர்…

தற்போது அவருக்கு இருக்கும் பேராதரவால் ஆதி குணசேகரன் கேரக்டரை தலைமறைவாக காட்டி இருக்கிறது சீரியல் குழு. ஆனால் அவருக்கு ஈடான ஒரு கதாபாத்திரமாக அவரின் அண்ணனாக ஒரு கதாபாத்திரத்தினை களமிறக்க இருக்கின்றனர். 

அந்த கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தியே நடிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது அந்த சீரியலில் டிஆர்பியை காப்பாத்தும் பொருட்டு ஒரு வலுவான கதாபாத்திரத்தினை களமிறக்கினாலே இவர்கள் தப்பிக்கும் நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Published by
Akhilan