நம்ம லெஜண்ட் அண்ணாச்சியின் அசத்தல் பேச்சு.. ஆடிப்போன தமிழ் சினிமா…

Published on: July 31, 2022
---Advertisement---

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள் சரவணன் அவர்கள் நடித்துள்ள திரைப்படம் தான் தி லெஜண்ட். கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இப்படத்தை  ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கியுள்ளனர்.

தி லெஜண்ட் ஹீரோ அருள் சரவணன் அவர்கள் தான் இப்படத்தை தயாரித்து உள்ளார். கோபுரம் பிலிம்ஸ் சார்பாக விநியோகஸ்தர் அன்பு செழியன் இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

இப்படத்தில் நடித்ததில் ஹீரோ அருள் சரவணன் தவிற மற்ற அனைவரும் தங்கள் நடிப்பை நன்றாக செய்து உள்ளனர் என்று கருத்து தான் பெரும்பாலும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்மையில் அருள் சரவணன் அவர்கள் செய்தியாளர்களிடம் ஏன்ன பேசினார் என்றால்,

நடிப்பு அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. முதலில் கார் ஓட்டும் போது முதல் இரண்டு நாட்கள் தடுமாறுவோம். அடுத்தது அது சரியாகி விடும். அது போல தான் நடிப்பும். முதல் இரண்டு நாட்கள் எனக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை. ஆனால், அதன் பிறகு அது ரொம்ப ஈசியாக வந்துவிட்டது. என்று சர்வ சாதாரணமாக கூறிவிட்டார்.

இதையும் படியுங்களேன் – ஒரே வீடியோவில் தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லோகேஷ்… என்ன ப்ரோ இப்படி சொல்லிடீங்க….

பல வருடம் கஷ்டப்பட்டு நடிப்பு என்றால் எப்படி இருக்கும் என்று நட்பு பட்டறைக்கு சென்று நடிப்பு பயிற்சி மேற்கொண்டு, வரும் நடிகர்களே இயக்குனர்களிடம் திட்டு வாங்கி தங்களது நடிப்பை மென்மேலும் மெருகேற்றி வருகின்றனர். அப்படி இருக்கையில் இரண்டு மூன்று நாட்களில் எனக்கு நடிப்பு வந்துவிட்டது என்று கூறும் அண்ணாச்சியின் கருத்து தமிழ் சினிமாவில் சின்ன சிரிப்பலையை உண்டாக்கி உள்ளது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.