ஜாபர் பிரச்சினையில் ரஜினி, விஜயை உள்ளிழுக்கும் அமீர்! அப்போ அதெல்லாம் உண்மைதானா?

Actor Ameer: தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக நடிகராக இருப்பவர் அமீர். சமீப காலமாகவே அவரைச் சுற்றி பல பிரச்சினைகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பருத்திவீரன் படம் தொடர்பாக ஏகப்பட்ட பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஞானவேல் ராஜாவுக்கும் அவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அது அப்படியே மெல்ல மெல்ல அணைய மீண்டும் ஜாபர் சாதிக் என்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனை தலையெடுக்க ஆரம்பித்தது. ஜாபர் சாதிக் என்பவர் அமீரின் நெருங்கிய நண்பர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் தற்போது கைதாகி உள்ளார். அதனால் அமீர் மீது சந்தேகம் கொண்டு டெல்லியில் உள்ள தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: ரஜினியை வைத்து மறுபடியும் படம் எடுப்பாரா கே.எஸ்.ரவிகுமார்? தெனாலி ரீ ரிலீஸ் எப்போது?

உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருளை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது விசாரணை மேற்கொண்டு அவரை போலீசார் கைது செய்தனர். இவருக்கும் அமீருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற நோக்கில் தான் இப்போது அமீரை போலீசார் நெருங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்க அவரின் ‘உயிர் தமிழுக்கு’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த பொழுது பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்விகளை கேட்டு நோகடித்தனர்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ‘உங்கள் நண்பராக இருந்த பொழுதிலும் அவருடைய இந்த தொழில் பற்றி உங்களுக்கு தெரியாதா? இவ்வளவு பணம் அவருக்கு வருகிறது என்பதை பற்றி உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லையா?’ என்றெல்லாம் கேட்டு அவரை கடுப்பேற்றினர்.

இதையும் படிங்க: சன் டிவி செஞ்ச வேலை!.. ராயனை டீலில் விட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!.. அப்செட்டில் தனுஷ்!…

ஆனால் அதற்கு பதில் அளித்த அமீர் ஏன் இந்த கேள்வியை லைக்காவிடம் கேட்க வேண்டியதுதானே? லண்டனில் லைக்கா மீது ஒரு புகார் இருக்கிறதே அது உங்களுக்கு தெரியாதா? பெரிய கார்ப்பரேட் கம்பெனி என்றால் விட்டுவிடுகிறீர்கள். சாதாரண ஒரு தனி மனிதனான என்னை சூழ்ந்து கொள்கிறீர்கள். லைக்கா மீது அப்படி ஒரு புகார் இருக்கிறது. அதைப் பற்றி விஜய் ஏன் கேட்கவில்லை? ரஜினி சாரும் ஏன் கேட்கவில்லை என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார் அமீர்.

 

Related Articles

Next Story