Connect with us

Cinema News

கைவிட்ட வெற்றிமாறன்…அண்ணனை விட்டா வேற வழியில்ல!…தனுஷ் நிலமை இப்படி ஆகிப்போச்சே!…

பொல்லாதவன் படத்தின் மூலம் இணைந்த தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவே தமிழ் சினிமாவில் மாறியது.

ஆடுகளம் படம் தேசிய விருதுகளை அள்ளிய நிலையில், வடசென்னை, அசுரன் என அந்த வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது.

ஆனால், அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் உடன் வெற்றிமாறன் இணைந்து இப்போதைக்கு படம் பண்ண போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இதற்கு காரணம் வெறும் தனுஷ் உடனே இணைந்து படம் பண்ணி வருவதால் தனது மார்க்கெட் தமிழ் சினிமாவை தாண்டி செல்லவில்லை என்பதை வெற்றிமாறன் நினைத்து விட்டார் என்கின்றனர். மேலும், அவருக்கும் ஒரு சேஞ்ச் மற்றும் சேலஞ்ச் தேவைப்படுவதால் தான் விசாரணை, விடுதலை என தனுஷ் உடன் இணைந்து பணியாற்றாமல் ஆளை மாற்றி உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை பொல்லாதவன் படம் முடிந்த உடனே வெற்றிமாறனுக்கு இருந்தது.

அப்போதிருந்தே தளபதி விஜய்யுடன் ஒரு படம் பண்ணி விட வேண்டும் என பெருமுயற்சியை அவர் மேற்கொண்டு வந்தார். ஆனால், அந்த கனவு இன்னமும் கனவாகவே உள்ளது அவரை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

அதன் பின்னர் தான் நடிகர் சூர்யாவிடம் வாடிவாசல் படத்தின் கதையை சொல்லி ஓகே வாங்கி அந்த படத்தை எப்படியாவது இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட வேண்டும் என துடித்து வருகிறார். ஆனால், சூர்யாவோ பாலா இயக்கத்தில் ஒரு படம், விக்ரம் படத்தில் கேமியோ, சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் கேமியோ என வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பையே இன்னமும் துவங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

அட்லி பாலிவுட்டுக்கு பறந்து சென்று ஷாருக்கானை சந்தித்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறனும் ஷாருக்கான் தென்னிந்திய இயக்குநர்களிடம் கதை கேட்கிறார். அசுரன் படம் அவரை ரொம்பவே கவர்ந்தது என்பதை அறிந்து கொண்டு அவருக்கும் ஒரு கதை சொன்னார். ஆனால், அட்லி அந்த வாய்ப்பையும் தன் வசப்படுத்திக் கொண்ட நிலையில், ஷாருக்கான் வெற்றிமாறன் காம்போ வொர்க்கவுட் ஆகவில்லை.

சூர்யாவின் வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் எப்படியாவது ஒரு படம் பண்ணி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்நிலையில், தனுஷ் உடன் இணைந்து அவர் இப்போதைக்கு அல்ல, இன்னும் 4 ஆண்டுகளுக்கு படம் பண்ணவே வாய்ப்பில்லை என்கின்றனர். அதன் காரணமாகத்தான் அண்ணன் செல்வராகவனிடம் தனுஷ் டோட்டலாக சரண்டர் ஆகி விட்டார் எனக் கூறுகின்றனர்.

வெற்றிமாறனை விடுத்து வெளியாட்களிடம் சென்று தனுஷ் சமீபத்தில் நடித்த ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே, மாறன் உள்ளிட்ட எந்த படமும் ஓடவில்லை. திருச்சிற்றம்பலம் படத்தின் மீது கூட பெரியளவு நம்பிக்கை இல்லையாம்.

நானே வருவேன் படத்தை முடித்தவுடன் புதுப்பேட்டை 2 படத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் ஆயிரத்தில் ஒருவன் 2 என தொடர்ந்து அண்ணன் செல்வராகவனிடம் தனக்கான தரமான படங்களை கொடுத்து மீண்டும் காப்பாற்ற வேண்டும் என சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top