More
Categories: Cinema News latest news

படப்பிடிப்பில் இறந்த ஸ்டண்ட் நடிகர்!.. கார்த்திக் செய்த உதவி!.. எவ்வளவு தெரியுமா?..

சமீபத்தில் கோலிவுட்டில் நடந்த விபத்து ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்தப் படத்தில் கார்த்தி, ராஷி கண்ணா. ரஷீஜா விஜயன், லைலா போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக ஒரு வரலாற்று பின்னனியில் அமைந்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகம் எடுக்க காரணமாக இருந்தது. அந்த நேரத்தில் கார்த்தி பல படங்களில் பிஸியாக இருந்ததனால் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. சமீபத்தில்தான் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.

ஆனால் ஆரம்பித்த நான்காவது நாளிலேயே ஒரு 20 அடி ஆழத்தில் இருந்து சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதே போல் ஒரு விபத்துதான் இந்தியன் 2 படம் எடுக்கும் போதும் நிகழ்ந்தது. அதனால் உடனே படப்பிடிப்பை நிறுத்தி ஆக வேண்டிய காரியத்தை பார்க்க ஆரம்பித்தனர்.

ஏழுமலையின் உடலுக்கு கார்த்தி நேரிடையாக வந்து அஞ்சலி செலுத்தினார். கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த கார்த்தியை பார்த்த ஏழுமலை உறவினர்கள் ‘கார்த்தி சார் வந்திருக்கிறாரு பாரு பாருனு’ ஏழுமலையின் உடலை கட்டிபிடித்து கதறிய வீடியோ நெஞ்சை உலுக்கியது.

இந்த நிலையில் உயிரிழந்தவருக்காக தன் சொந்த பணத்தில் இருந்து கார்த்தி பண உதவி செய்திருப்பதாக தெரிகிறது. இதை அறிந்த சில பேர் எவ்வளவு கொடுத்தீர்கள் என கார்த்தியிடம் கேட்க அதற்கு கார்த்தி ‘அதெல்லாம் சொல்ல முடியாது. இதன் மூலம் பப்ளிசிட்டி தேடவும் விரும்பவில்லை. செய்யனும்னு தோணுச்சு.’ என பதில் அளித்தாராம்.

ஆனால் விசாரித்ததில் ஒரு லம்பான தொகையை கார்த்தி கொடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் பப்ளிசிட்டிக்காக இவ்ளோ கொடுத்தேன் என சொல்லுபவர்கள் மத்தியில் கார்த்தியின் பெருந்தன்மை அனைவராலும் மதிக்கப்படுகிறது.

Published by
Rohini