Categories: latest news

அண்ணன் ஒட்ட நினைக்க தம்பி வெட்ட நினைக்காரு! கலைஞர் 100 விழாவில் அமீரை பார்த்த கார்த்தியின் ரியாக்‌ஷன்

Actor Karthi: தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் முலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் கார்த்தி. அதற்கு முன் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். கார்த்திக்கு முன்பாகவே இயக்குனர் அமீருக்கும் சூர்யாவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது.

நந்தா படத்தில் இருந்தே சூர்யாவிடம் நெருக்கம் காட்டிய அமீர் அவரை வைத்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கினார். படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் பருத்திவீரன் படத்தை மீண்டும் சூர்யாவை வைத்து எடுக்க ஆசைப்பட்ட அமீர் கார்த்தியை பார்த்ததும் அவரை வைத்து எடுத்தார்.

இதையும் படிங்க: இனிமேல் கோலிவுட் பக்கமே வரக்கூடாது! நடிகையை கடுமையாக விளாசிய கே ராஜன்

அந்தப் படத்தில் என்னென்ன பிரச்சினைகள் எழுந்தன என அனைவருக்குமே தெரியும். பருத்திவீரன் படத்தை சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாதான் தயாரித்தார். அதனால் அந்தப் படத்திற்காக ஞானவேல் ராஜா  அமீருக்கு ஒரு பெரிய தொகையை கொடுக்க வேண்டியிருப்பதாகவும் அது சம்பந்தமாக அமீர் ஞானவேல் ராஜா மீது புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில் ஞானவேல் ராஜா அமீரை தகாத வார்த்தைகளால் பேசி அனைவருக்குள்ளும் இருந்த மதிப்பையும் கெடுத்துக் கொண்டார். ஒரு கட்டத்திற்கு பிறகு அமீரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார் ஞானவேல் ராஜா.  இந்த பிரச்சினை இப்படியே போக சமீபத்தில் தான் கலைஞர் 100 விழா நடந்தது.

இதையும் படிங்க: ஸ்கூல்ல படிக்கும்போதே வள்ளலாக இருந்த விஜயகாந்த்!.. அப்பாவின் கோபத்துக்கு ஆளான கேப்டன்..

அந்த விழாவிற்கு வெற்றிமாறனுடன் அமீர் அருகருகே உட்கார்ந்திருந்தனர். அப்போது சூர்யா வர வெற்றிமாறனை பார்த்ததும் கைகுலுக்கியதோடு அருகில் இருந்த அமீருக்கும் கை கொடுத்தார். உடனே அமீரும் எழுந்து நிற்க இருவரும் கட்டியணைத்துக் கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சங்க செயலாளரான நடிகர் கார்த்திதான் அந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தாராம். அப்போது வெற்றிமாறனையும் அமீரையும் கடந்து பல முறை சென்றிருக்கிறார். ஆனால் ஒரு தடவை கூட அமீர் பக்கம் கார்த்தி திரும்பவே இல்லையாம்.இதுதான் அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கொடுக்கிற மரியாதையா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: விஜயகாந்த் 120 முறை பார்த்து ரசித்த அந்த திரைப்படம்!.. வெறித்தனமான ரசிகரா இருந்தி்ருக்காரே!..

Rohini

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

36 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

38 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

40 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago