Categories: latest news

ரொம்ப நாளைக்கு பிறகு வெளியே வரும் கார்த்திக்! உண்மையிலேயே அவருக்கு என்னதான் ஆச்சு?

Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானவர்தான் கார்த்திக்.முரளி என்ற தன் பெயரை கார்த்திக் என இந்தப் படத்தின் மூலம்தான் மாற்றிக் கொண்டார். இந்தப் படத்திற்கு நடிகரை தேடிக் கொண்டிருக்க முத்துராமன் மகன் ஒருவர் இருக்கிறார் என பாரதிராஜாவை அவரது உதவியாளர் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

தன் மகனை முதலில் நடிக்க வைக்க முத்துராமன் மறுத்தாலும் அதன் பிறகு ஒப்புக் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர் கூட்டத்தை கூட்டி அவர்கள் முன் என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறியே கார்த்திக்கை பாரதிராஜாவிடம் ஒப்படைத்தாராம் முத்துராமன். ஆரம்பத்தில் பல தோல்விகளை கண்டாலும் ‘வருஷம் 16’ மற்றும் ‘மௌன ராகம்’ போன்ற படங்கள் கார்த்திக் மீது ஒரு பெரிய க்ரேஷையே ஏற்படுத்துகின்றன.

இதையும் படிங்க: 20 முறை சூர்யாவுடன் மோதிய சியான் விக்ரம் படங்கள்!… அதிக தடவை ஜெயித்த ஹீரோ யாரு தெரியுமா?..

சினிமாவில் ஒரு அந்தஸ்தை அடைந்த பிறகு குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் போவது, குடிப்பது என தயாரிப்பாளர்களை அலைய வைத்திருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா கூட ஒரு பத்திரிக்கையில் ரஜினி , கமல் இவர்களுக்கு பிறகு கார்த்திக்தான் அடுத்த இடத்திற்கு வருவார் என்று பதிலளித்திருந்தார்.

அந்தளவுக்கு கார்த்திக் மீது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் அவரே கெடுத்துக் கொண்டார் என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். இப்படித்தான் ஒரு சமயம் கார்த்திக், அஜித் சேர்ந்து நடிக்கும் போது கார்த்திக் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததாகவும் அப்போது கோபமடைந்த படக்குழு ஒரு ரவுடி மூலமாக கார்த்திக்க்கை கடத்தி வைத்து இரண்டு நாள்கள் நடுக்கடலில் கட்டி வைத்ததாகவும் ஒரு செய்தி அப்போது வைரலானதாம்.

இதையும் படிங்க: காத்திருந்து குறி வச்ச மாதிரி தெரியுது.. ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா

ஆனால் அது உண்மையா இல்லையா என்பது தெரியாது என செய்யாறு பாலு கூறினார். இதற்கிடையில் பல மாதங்களாக பொது வெளியில் வராமல் இருந்தார் கார்த்திக் .சித்ரா லட்சுமணனிடம் ரசிகர்கள் பலர் கார்த்திக்கை பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவருக்கும் என்னதான் ஆச்சு கார்த்திக்கு என தெரியவில்லை என பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்வதற்காக கார்த்திக் வர இருக்கிறார் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அவரை பார்க்கவாவது ஒரு திரளான கூட்டம் வரும் என்று சொல்லப்படுகிறது.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

2 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

4 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

11 hours ago