Categories: latest news

வெளிநாட்டில் பாஸ்போர்ட்டை மிஸ் பண்ண குமரிமுத்து! மறுநாள் சூட்டிங்.. எப்படி வந்தார் தெரியுமா

Producer V.Sekar: சினிமாவை பொருத்தவரைக்கும் அள்ளிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் சமீபகாலமாக அதிகரித்து விட்டனர். பிஸினஸ் பெருமளவு நடக்க வேண்டும் என்பதற்காக கடனை வாங்கி பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்து ரசிகர்களை கவர்வதற்காக தயாரிப்பாளர்கள் வித விதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். நடிகர்களின் சம்பளம் இந்தளவு கோடி கோடியாய் உயர்ந்ததற்கும் காரணம் இந்த மாதிரி தயாரிப்பாளர்கள்.

ஆனால் தயாரிப்பாளர் வி.சேகர் இதற்கெல்லாம் கொஞ்சம் வித்தியாசமானவர். என் பணம், என் படம், நான் முதலீடு போட்டு படம் எடுக்கிறேன். அப்படி இருக்கும் போது நஷ்டம் அடைய விடுவேனா? என்று நினைத்தே கொஞ்சம் கறாராகவே இருந்திருக்கிறார். ஒரு படத்தின் மொத்த படப்பிடிப்பு 60 நாள்கள் என்றால் அந்த படத்தில் நடிக்கும் கலைஞர்களை மொத்தமாக லாக் செய்து விடுவாராம்.

இதையும் படிங்க: அஜித் போட்டிருக்கும் முகமூடி! பொங்கி எழுந்து வீடியோவை வெளியிட்டதற்கு இதுதான் காரணமா?

இந்தப் படம் முடியும் வரை வேறெந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று எழுதி வாங்கிவிட்டு ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு வரவழைத்து இரண்டு மாதம் லாக் செய்து விடுவாராம். குளிப்பது, கழிவறை பயன்படுத்துவது எல்லாமே அந்த செட்டிற்குள்தானாம். இப்படித்தான் தன் படத்தில் கலைஞர்களை நடிக்க வைத்திருக்கிறார்.

ஒரு படத்திற்காக குமரிமுத்து நடித்துக் கொண்டிருந்தாராம். பத்து நாள் இடைவெளி குமரிமுத்துவிற்கு கிடைத்திருக்கிறது. அந்த பத்து நாளில் வெளி நாட்டில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. முடித்துவிட்டு வருகிறேன் என்று சேகரிடம் குமரி முத்து அனுமதி கேட்டிருக்கிறார். இரண்டு நாளில் திரும்பி வந்து விட வேண்டும் என சேகர் கூறி அனுப்பி வைத்தாராம்.

இதையும் படிங்க: அஜித் போட்டிருக்கும் முகமூடி! பொங்கி எழுந்து வீடியோவை வெளியிட்டதற்கு இதுதான் காரணமா?

துரதிர்ஷ்டவசமாக வெளி நாட்டிலேயே குமரி முத்துவின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாம். க்ளைமாக்ஸ் காட்சியில் குமரி முத்து நடிக்க வேண்டியிருந்ததாம். பாஸ்போர்ட் எல்லாம் அப்ளை செய்து நேராக செட்டிற்கே வந்திருக்கிறார் குமரி முத்து. ஆனால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். இதனால் தனக்கு 15 லட்சம் நஷ்டம் என தயாரிப்பாளர் வி.சேகர் ஒரு பேட்டியில் கூறினார்.

sekar

இவர் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என விவேக் விரும்பி சென்றாராம். ஏனெனில் கவுண்டமணி, வடிவேலு போன்றவர்கள் எல்லாம் சேகர் படத்தில் நடித்து அந்தப் படங்கள் 100 நாள்கள் ஓடியதாம். அதே போல் நம் படமும் 100 நாள் ஓட வேண்டும் என சேகர் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ஆனால் வந்த பிறகுதான் தெரிந்ததாம் இது ஒரு ஜெயில் என்று என விவேக் கூறியதாகவும் சேகர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: KPY பாலா செய்யும் உதவியால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை… ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலையே!

Rohini

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

5 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

1 hour ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

1 hour ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

1 hour ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago