More
Categories: Cinema News latest news

நாலு வருஷமா கல்லாப்பெட்டி காலியாத்தான் இருக்கு….!நிலைமையை எண்ணி வருத்தப்படும் லவ்வர்பாய் நடிகர்…

அலைபாயுதே, மின்னலே, டும்டும், ரன், போன்ற படங்களில் நடித்து பெண்களின் இதயத்தில் ஒரு லவ்வர் பாயாகவே வாழ்ந்தவர் நடிகர் மாதவன். அலைபாயுதே படத்தின் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ஹிந்தியிலும் வாய்ப்பு வந்து பல ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.

Advertising
Advertising

ஆரம்பத்தில் பிளே பாயாகவே நடித்துக் கொண்டிருந்த மாதவன் ரன் படத்தின் மூலம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச் சுற்று படத்தில் நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இவர் கடைசியாக ‘மாறா’ படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ஓடிடியில் வெளியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வந்த மாதவன் அந்த படத்தை எழுதி இயக்கி அதில் நம்பி நாராயணனாகவும் நடித்துள்ளார்.’ ராக்கெட்ரி: நம்பி விளைவு’ என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் தயாராகியுள்ளது.

இதன் போஸ்டரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டு பேசிய மாதவன் “ கடந்த 4 வருடங்களாக கொரானா காரணத்தால் நான் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. அந்த நேரங்களில் இந்த படத்தை தயாரிக்கும் பணியில் தான் இருந்தேன். மேலும் என்னை ஓடிடி மட்டும் தான் தொடர்ந்து சினிமாவில் தக்க வைத்து வருகிறது” என்று கூறினார்.

Published by
Rohini

Recent Posts