Connect with us
marimuthu

Cinema News

‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்து திடீர் மரணம்… இன்னும் எத்தன பேர காவு வாங்குமோ!…

Actor Marimuthu: தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு வயது 56.

கடந்த சில மாதங்களாக அவர் ரசிகர்களிடம் பிரபலாகி வந்தார். ‘இந்தம்மா ஏய்’ என சத்தம் போட்டு கத்துவார் என்பதாலும், இதை அடிக்கடி அவர் சொல்லி வந்ததாலும் இதுவே அவரின் அடையாளமாகி போனது.

இன்று காலை 8.30 மணியளவில் மாரடைப்பில் மரணமடைந்துள்ளார். அவரின் திடீர் மாரடைப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சன் டிவியில் ஒளிபரப்ப்பாகி வந்த எதிர் நீச்சல் சீரியலிலும் நடித்து வந்தார். ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் திடீரென அவர் மரணமடைந்தது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரின் மருத்துவமனையில் இருக்கிறது. விரைவில் அவரின் உடல் அவரின் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரின் மறைவுக்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே திரையுலகினரை சேர்ந்த பலரும் மாரடைப்பில் மரணமடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top