Connect with us

Cinema History

மிட் நைட்டில் சிம்பு பார்த்த வேலை!.. பதறிய நடிகர்!.. தியேட்டர்ல நடந்ததுதான் ஹைலைட்!…

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக கலக்கியவர்தான் டி.ராஜேந்திரன். அவரின் மகன் சிலம்பரசன். சுருக்கமாக சிம்பு என அழைக்கிறார்கள். சிம்புவை சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வைத்தார் டி.ஆர். எனவே, நடிப்பு, நடனம் இரண்டும் சிம்புவின் உடலில் இரண்டர கலந்துவிட்டது.

டி.ஆர் இயக்கிய காதல் அழிவதில்லை படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். சிம்புவுக்கு நன்றாக நடனமாட தெரியும் என்பதால் அதை வைத்தே சினிமாவில் முன்னேறினார். பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதேநேரம், படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கதற விடுவார் என்கிற புகார் இவர் மீது உண்டு.

இதையும் படிங்க: கேப்டனாக மாறிய வினுசக்கரவர்த்தி! கலாட்டா செய்த ரசிகர்களை என்ன செய்தார் தெரியுமா?

ஆனாலும், அவ்வப்போது ஹிட் படங்களில் நடித்துவிடுவதால் இவருக்கான மார்க்கெட் குறையாமல் இருக்கிறது. மாநாடு எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார். இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்து ஊடகம் ஒன்றில் சிம்புவை பற்றி பகிர்ந்த செய்தியைத்தான் இங்கே பார்க்க போகிறோம். சிம்பு என்னிடம் அன்பாக பழகுவார். நள்ளிரவில் பைக்கில் நானும் அவரும் சென்னையை சுற்றி வருவோம். கையேந்தி பவன் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு சென்று ஃபிரைட் ரைஸ் சாப்பிடுவோம்.

இதையும் படிங்க: விஜய்க்காக இறங்கி வந்த லாரன்ஸ்! அடுத்து அரசியலிலும் ஆட்டம் காட்டுவார்களா? வைரலாகும் வீடியோ

தனது முகம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சிம்பு கர்ச்சிப்பால் மூடிகொள்வார். அவர் நடித்து குத்து படம் வெளியானபோது இருவரும் சங்கம் தியேட்டருக்கு படம் பார்க்க போனோம். படம் முடிந்து வெளியே வந்தபோது அவரின் கர்ச்சீப்பை ஒருவர் தெரியாமல் இழுத்துவிட்டார்.

அப்போதுதான் அது சிம்பு என்பது அங்கிருந்தவர்களுக்கு தெரிந்தது. உடனே அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வமாகி அவரை சூழ்ந்து கொண்டனர். எப்படியே ஒருவழியாக அங்கிருந்து வெளியே வந்தோம்’ என மாரிமுத்து சொல்லி இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top