Connect with us
mirna

Cinema News

நடிகருடன் காதல், கல்யாணம் , அபார்ஷன்! பல தடைகளை தாண்டி ‘ஜெய்லர்’ படத்தில் கெத்து காட்டிய நாயகி

ஜெய்லர் படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் சுவேதாவாக ரஜினியின் மருமகளாக நடித்திருப்பவர் மிர்னா மேனன்.

தமிழில் ஜெய்லர் தவிர்த்து ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அடிப்படையில் இவர் ஒரு மலையாளி. ஆரம்பகாலங்களில் படிப்பை முடித்த மிர்னா ஆங்கராகத்தான் தன் பயணத்தை தொடங்கியிருக்கிறார். இவர் முதலில் அதிதி மேனன் என்று தன் பெயரை வைத்திருந்தாராம்.

இதையும் படிங்க : இப்பதான்டா நிம்மதி!.. விஜய் மீதுள்ள காண்டை சீரியலில் காட்டிய எஸ்.ஏ.சி.. வீடியோ பாருங்க…

இதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட பெயர்களை ராசிக்காக மாற்றிக் கொண்டிருப்பவர் மிர்னா. தமிழில் முதன் முதலில் பட்டதாரி என்ற படத்தின் மூலம் அறிமுகமான மிர்னா தொடர்ந்து களவானி மாப்பிள்ளை போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார்.  பட்டதாரி படத்தில் ஹீரோவாக நடித்த அபிசரவணன் மீது மிர்னாவுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் அதற்கு முன் அபிசரவணனுக்கு காதல் பிரேக் அப் ஆகி மிர்னாவை அபிசரவணனின் குடும்பமே விரும்ப மிர்னாவும் அபிசரவணனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஒரு சமயம் இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவர ஒரு பெண்ணிடம் இருந்து மிர்னாவுக்கு போன் வந்திருக்கிறது.

அதாவது தான் அபி சரவணனால் ஏமாற்றப்பட்ட பெண் என்றும் என்னை காதலித்து கடைசியில் ஆள்கள் வைத்து அடித்து துரத்தி விட்டார் என்றும் கூறினாராம். ஆனால் மிர்னா அதை நம்பவில்லையாம். அதன் பிறகு மிர்னாவும் அபிசரவணனும் ஒரு வீட்டின் அறையில் தான் ரகசியகாக திருமணம் செய்திருக்கின்றனர். அந்த வீடியோவும் வைரலானது.

mirna1

mirna1

அதன் பின் மிர்னாவுக்கு ஒரு  மெமரி கார்டு கையில் கிடைக்க அதில் அபிசரவணன் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என்பது தெரியவர ஒரு கட்டத்தில் அபி சரவணனை விட்டு விலக் ஆரம்பித்தாராம் மிர்னா. இது அப்படியே போலீஸ் கேஸ் ஆக அதில் அபி சரவணன் மிர்னா மீது என் கரு அவள் வயிற்றில் வளர்ந்தது என்றும் அதை கலைத்துவிட்டார் என்றும் என் நண்பர் மீது கள்ளக்காதலில் ஈடுபட்டார் என்றும் புகார் அளித்தாராம்.

இதையும் படிங்க : ஒரு வழியா விட்டாங்க அப்டேட்டு… அஜித்தின் விடாமுயற்சி படக்குழு சொன்ன சூப்பர் தகவல்… கடுப்பான ரசிகர்கள்!

இப்படி பல பிரச்சினைகளை மேற்கொண்ட மிர்னா இந்த தமிழ் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி இருந்தாராம். அதன் பிறகு தான் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் இணைந்தார். அதனை அடுத்து ஜெய்லர் படத்திலும் தனது திறமையை காட்டி வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top