அக்கா வெறும் நடிகை மட்டும் கிடையாது.. இன்னொரு முகம் இருக்கு! நகுல் கொடுத்த சர்ப்ரைஸ்

devayani
Devayani: 90களில் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. தொட்டாசிணுங்கி படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான தேவயானி அதன் பிறகு சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடித்து காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் தான் அவருக்கு ஒரு சரியான அங்கீகாரம் கிடைத்தது. அந்தப் படம் தான் அவரை இந்த தமிழ் சினிமாவில் தூக்கி நிறுத்தியது .அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் தேவயானி.
சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு ஹீரோயின் என்றால் கவர்ச்சி காட்டாமல் அவர்கள் உயர்ந்த இடத்தை அடைய முடியாது என்ற ஒரு எண்ணம் இருந்தது. அதை முற்றிலுமாக மாற்றி அமைத்தவர் தேவயானி. இதுவரை எந்த ஒரு கவர்ச்சியையும் காட்டாமல் நடிப்பு அழகு பெர்பார்மன்ஸ் இதை மட்டுமே முன்னிலைப்படுத்தி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர். இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் .இவர்களுடைய திருமணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் ஒரு ஷாக்கிங் நியூஸாகத்தான் இருந்தது.
அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது இவர்களது திருமணம். திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த தேவயானி சமீப காலமாக மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் நிழற்குடை. அந்தப் படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் கலந்துகொண்டு தேவயானி பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். தன்னுடைய அக்காவை என்னுடைய அம்மா ஸ்தானத்தில் வைத்து தான் பார்க்கிறேன் .

என் அம்மாவுக்கு பிறகு அவர் தான் எல்லாமுமாக இருந்து வருகிறார் என்று நகுல் கூறினார். அது மட்டுமல்ல என் அக்கா நடிகை என்பதையும் தாண்டி அவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. என்னுடைய உறவுக்கார பையனை பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு கோர்ஸுக்காக சேர்க்க அக்காவிடம் சொல்லி இருந்தேன். அவரும் அழைத்துக் கொண்டு போனார். ஆனால் போன இடத்தில் அக்கா இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் அது சம்பந்தமான கோர்ஸை படிக்க அவர் சேர்ந்து விட்டார். ஒரு மூன்று மாத காலம் இயக்குனர் பயிற்சி எடுத்து அதன் பிறகு கைகுட்டை ராணி என்ற படத்தையும் இயக்கினார்.
அது ஒரு குறும்படம் தான்.. அந்தப் படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை இருந்தால் படத்தின் ஹைப் இன்னும் வேறு மாதிரி இருக்கும் என்பதற்காக இளையராஜாவிடம் போய் கேட்டார் .ஆனால் அவரிடம் கேட்கும் போது தான் ஒரு முன்னணி நடிகை என்ற ஒரு எந்த ஒரு பந்தாகவும் இல்லாமல் படத்தை பாருங்கள் உங்களுக்கு பிடித்தால் இந்த படத்திற்கு நீங்கள் இசை கொடுங்கள் என பணிவன்புடன் கேட்டார். இளையராஜாவும் படத்தை பார்த்து அவருக்கு பிடிக்க நானே இந்த படத்திற்கு இசையமைக்கிறேன் என இசையமைத்து கொடுத்தார் இளையராஜா. இயக்குனராகவும் என் அக்கா மாறிவிட்டார். அதனால் இப்போது அவர் நடிகை மட்டுமல்ல ஒரு இயக்குனர் என்று சொல்ல நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என நகுல் கூறினார்.