Cinema News
பிரபல நடிகர் நெடுமுடிவேணு காலமானார்… திரையுலகினர் அதிர்ச்சி…
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் நெடுமுடி வேணு. பல வருடங்களாக அவர் நடித்து வருகிறார். சிறந்த குணச்சித்திர நடிகராக அவர் விளங்கினார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர்.
தமிழில் இந்தியன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். அந்நியன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
73 வயதான நெடுமுடிவேணு சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதிலிருந்து மீண்ட அவருக்கு இன்று காலை மீண்டும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. எனவே, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.