நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி...

கர்நாடகாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராஜ்குமார். இவரைத்தான் சந்தன கடத்தல் வீரப்பன் கடத்தி சென்று சில நாட்கள்: காட்டில் வைத்திருந்தான். பின்னர் ஒருவழியாக அவரை விடுவித்தான்.

அவருக்கு மொத்தம் 3 மகன்கள். அதில் மூத்தவர் ஷிவ் ராஜ்குமார். அவரின் சகோதரர் புனித் ராஜ்குமார். இருவருமே நடிகர்கள். தந்தையின் மறைவுக்கு பின் அவர்கள் இருவரும் கன்னட சினிமாவில் முக்கிய இடங்களை பிடித்தனர். இதில், புனித் ராஜ்குமார் கன்னட சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர்.

punit rajkumar

இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனவே, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அவரின் ரசிகர்களுக்கும், கன்னட சினிமா உலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்களும், சினிமாத்துறையை சேர்ந்தவர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

 

Related Articles

Next Story