Connect with us
radha

Cinema News

என் அப்பாவ பத்தி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கு? நான் வேஸ்ட்டா? ஆவேசமாக பேசிய ராதாரவி

தமிழ் சினிமாவில் நடிப்பில் மற்றுமொரு ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகத்தின் மீது அதீத பற்று கொண்டவர். நாடகத்தை தெய்வமாக போற்றக்கூடியவர். பல நாடகங்களை அரங்கேற்றம் செய்து அதன் மூலம் சினிமாவில் பிரபலமானார்.அதில் ஒரு நாடகம் தான் ரத்தக்கண்ணீர் .அது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்ததால் அதை அப்படியே படமாக எடுக்க திட்டமிட்டார்.

radha1

radha1

நாடகத்தின் உயிர்மூச்சு

இப்படி பல படங்களில் நடித்த தன்னை ஒரு சிறந்த நடிகனாக மக்களுக்கு காட்டியவர் .அதையும் தாண்டி யாரையும் முகத்திற்கு எதிராக விமர்சனம் செய்யக் கூடியவர் .தைரியமானவர். திராவிட கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டவர். இப்படி பல புகழை அடைந்த எம்.ஆர்.ராதாவை பற்றி பிரபல அரசியல் விமர்சகர் ஆன டாக்டர் காந்தராஜ் பல விமர்சனங்களை முன் வைத்தார்.

சின்னப் பொண்ண போயி

அதாவது மூன்று மனைவிகளை திருமணம் செய்தாலும் கடைசி காலத்தில் கூட ஒரு சின்ன பெண்ணை கல்யாணம் செய்தவர் எம்ஆர்.ராதா என்றும் ராதாரவி ,ராதிகா இவர்கள் பிறந்தது எல்லாம் வேஸ்ட் என்றும் எம் ஆர் ராதாவை பற்றி பேச ராதாரவிக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்றும் பல அடுக்கடுக்கான விமர்சனங்களை முன் வைத்தார்.

இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ராதாரவி காந்தா ராஜ் கிழித்து தொங்க விட்டிருக்கிறார். அந்த காந்தராஜ் மட்டும் என்கிட்ட மாட்டுனா திருப்பிடுவேன் என்று மிரட்டும் தொணியில் பேசினார். மேலும் “அந்த வயசிலயும் ஒரு சின்ன பெண்ணை கூட்டிட்டு வந்தார் என்று சொன்னாரே அவருக்கு தெம்பு இருக்கு .அதனால கூட்டிட்டு வந்தாரு. நீ வேணும்னா ஒரு பெண்ணை கூட்டிட்டு வாயேன்” என்றும் ராதாரவி கேள்வி எழுப்பினார்.

radha2

radha2

நேர்ல பாத்தேன்..அவ்ளோதான்

“நான் பிறந்தது வேஸ்டுனு சொல்றாரு. அப்போ நீ பிறந்ததும் வேஸ்ட் தான். உனக்கு உன் பசங்க பிறந்ததும் வேஸ்ட் தான்,  நாங்களா பெத்துக்க சொன்னோம்? அவர்தான் எங்கள் பெத்தாரு. ஏதோ கடவுள் புண்ணியத்துல அவர் பெயரை இன்று வரை காப்பாற்றி கொண்டு இருக்கிறோம்” என்றும் கூறினார். மேலும் கூறிய ராதாரவி “அந்த காந்தராஜ் முன்னாள் மந்திரியாக இருந்த ராஜாராம் அவரின் தம்பி. அந்த ராஜா ராம் என் அப்பா கம்பெனியில் ஒரு நடிகராக இருந்தவர் .அவருக்கு உள்ள மரியாதை காரணமாகத்தான் இவரை சும்மா விடுறேன். இன்னும் நேர்ல காந்தராஜா பார்க்கல .பார்த்தா எல்லாத்தையும் கேட்டு விடுவேன், இப்படி பொய்யெல்லாம் சொல்லக் கூடாது” என்று கூறினார்.

இதையும் படிங்க : சிவாஜி படத்துல இவங்க மட்டும் இருந்தாங்கனா கொஞ்சம் தயங்குவாராம்! யார் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top