இனிமே சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு இடமே இல்ல - போட்டியை டிராவில் முடித்த ரஜினி!

சமீபகாலமாக ரஜினி , விஜய் போட்டியை பற்றித்தான் பேச்சு அடிபட்டு வருகிறது. எல்லாம் அந்த சூப்பர் ஸ்டார் பிரச்சினை குறித்த விவாதங்கள் தான் காரணம். தூண்டி விட்டவர் நல்ல நல்ல படங்களில் எந்தவொரு வம்புக்கும் போகாமல் அவர் வேலையை செய்து கொண்டு வருகிறார். ஆனால் மாட்டிக்கிட்டு முழிக்கிறது விஜயும் ரஜினியும் தான்.

இருந்தாலும் இருவருக்கும் உள்ளுக்குள்ள ஒரு பிரஸ்டீஜ் சம்பந்தமான ஒரு போட்டி போய்க் கொண்டிருக்கிறது என கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். அப்படி இல்லையென்றால் ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு மறைமுகமாக விஜயை தாக்குவதாக இருந்திருக்காது. ஆனால் ரஜினி அப்படி செய்யவில்லை. வெளிப்படையாகவே பேசியிருக்கலாம்.

இதையும் படிங்க : இனி சிங்கப்பாதை தான்… சூப்பர்ஸ்டார் டைட்டிலே வேணாம்.. இதை செய்தால் விஜய் தான் இனி எதிர்காலம்!

இந்த நிலையில் ரஜினி தற்போது த.ச.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தன்னுடைய 171வது படத்தில் இணைய இருக்கிறார். ஆனால் அந்தப் படத்திற்காக ரஜினி சம்பளம் எதுவுமே பேசாமல்தான் இருந்தாராம்.

ஆனால் இப்போது ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றியால் 171 படத்திற்கு ரஜினி கண்டிப்பாக 200 கோடி சம்பளத்தை எதிர்பார்ப்பார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சரிவர போகாததால்தான் ஜெய்லர் படத்திற்கு 80கோடியாக ரஜினிக்கு குறைக்கப்பட்டது.

இப்போது ஜெய்லர் படம் மாஸ் ஹிட் அடித்திருக்கிறது. அதனால் அவர் 200 கோடி சம்பளம் கேட்பதில் எந்த தவறும் இல்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. அதே வேளையில் இந்த சம்பளத்தை காட்டித்தான் சூப்பர் ஸ்டார் என்ற விவாதமும் வந்தது. 80 கோடி சம்பளம் ரஜினி எங்க? 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய் எங்க? என்ற விவாதம் வந்தது.

இதையும் படிங்க : என்னம்மா கண்ணு சவுக்கியமா? சத்யராஜை அசிங்கப்படுத்திய ரஜினி… தீரா பகை உருவானது எப்படி?

அதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ரஜினியும் 200 கோடி வரை சம்பளம் கேட்பார் என்று சொல்கிறார்கள். இப்படியே போனால் தமிழ் சினிமாவின் நிலைமை என்னாகும் என்றே தெரியவில்லை. நடிகர்களுக்கு இவ்ளோ பெரிய தொகையை கொடுத்து படம் எடுப்பதற்கு பல நல்ல நல்ல உதவிகளை சமூகத்திற்கு செய்து விட்டு போயிடலாம்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it