அஜித் லவ் பண்றது தெரியாமல் அட்வைஸ் சொன்ன ரமேஷ் கண்ணா!.. இவ்வளவு அப்பாவியா இருக்காரே!...

ramesh
திரையுலகில் எந்த சினிமா பின்னணி இல்லாமல் நுழைந்தவர் நடிகர் அஜித். சாக்லேட் பாயாக நடிக்க துவங்கி பல படங்களில் அப்படியே நடித்தார். ஆசை படம் அவருக்கு நிறைய பெண் ரசிகைகளை பெற்று தந்தது. வான்மதி திரைப்படத்தின் வெற்றி அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று தந்தது. காதல் கோட்டை படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகராக மாற்றியது. பில்லா மற்றும் மங்காத்தா படங்கள் அஜித்தை மாஸ் நடிகராக மாற்றியது. இப்போது விஜய்க்கு நிகரான மார்க்கெட் மதிப்புள்ள நடிகராக அஜித் மாறினார்.
நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். ஆனால், திரையுலகில் பல காதல்களை அஜித் கடந்து வந்துள்ளார். நடிகை சுவாதி, ஹீரா என சிலரை காதலித்தார். ஆனால், அது கைகூடவில்லை. அப்போதுதான் அமர்க்களம் படத்தில் ஷாலினியுடன் நடித்தார். ஷாலினியை பார்த்ததும் காதல் கொண்ட அஜித் ஷாலினியின் சம்மதத்தை பெற பல வழிகளிலும் போராடினார். இறுதியாகத்தான் ஷாலினி ஓகே சொன்னார்.
அமர்க்களம் படத்தில் அஜித்துடன் ரமேஷ் கண்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். படப்பிடிப்பில் அஜித் ஷாலினியை சைட் அடித்துகொண்டிருந்ததை பார்த்த ரமேஷ் கண்ணா அவரிடம் சென்று ‘உனக்கு இப்ப நல்ல மார்க்கெட் இருக்கு. உனக்குன்னு ரசிகர்கள் இருக்காங்க. அத சரியா பயன்படுத்திக்கொள். நடிகையை திருமணம் செய்து கொள்ளாதே. குடும்பபாங்கான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்’ என அறிவுரை சொன்னாராம்.
அவர் அஜித்திடம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த அப்படத்தின் இயக்குனர் சரண் அவரை அழைத்து ‘அஜித்தும் ஷாலினியும் லவ் பண்றாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம். நீங்க இப்படி பேசினா அடுத்த படத்துல உங்களுக்கு அஜித் வாய்ப்பு தரமாட்டார்’ என சொல்லி சிரிக்க ரமேஷ் கண்ணா ஜெர்க் ஆகிவிட்டாராம்.
இதை ஒரு பேட்டியில் ரமேஷ் கண்ணாவே கூறியிருக்கிறார். அஜித்தை வைத்து ‘தொடரும்’ என்கிற படத்தை ரமேஷ் கண்ணா இயக்கியது குறிப்பிடத்தக்கது.