More
Categories: Cinema History Cinema News latest news

லவ் பண்ற இடமா இது?!.. தேவயானியால் படப்பிடிப்பில் கடுப்பான சரத்குமார்…

நயன்தாரா விக்னேஷ் சிவனில் துவங்கி தமிழ் சினிமாவில் காதல் திருமணங்கள் என்பது பல காலங்களாகவே நடந்து வருகின்றன. அதிலும் இயக்குனர் நடிகையை காதலித்து திருமணம் செய்வது என்பது தமிழ் சினிமாவில் பல முறை நடந்துள்ளது.

அப்படியான ஒரு காதல் கதையை கொண்டவர்தான் நடிகை தேவயானி நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் அறிமுகமான பிறகு சில நாட்களிலேயே மிகவும் பிரபலமாகிவிட்டார். அவர் நடித்த படங்களில் அவரை பெரும் உச்சிக்கு கொண்டு சென்ற திரைப்படம் சூர்ய வம்சம்.

Advertising
Advertising

அதே சமயத்தில்தான் நடிகர் விக்ரம் சேது திரைப்படத்தில் நடித்து பிரபலமாக இருந்தார். எனவே இவர்கள் இருவரையும் வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கலாம் என்று நினைத்த இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் இருவரையும் வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற திரைப்படத்தை இயக்கினார். கூடுதலாக இந்த திரைப்படத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார்.

படப்பிடிப்பில் நடந்த பிரச்சனை:

இந்தப் படத்தை இயக்கும் பொழுதுதான் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பில் படத்தை கூட ஒழுங்காக எடுக்காமல் எப்போதும் தேவயானியை அழைத்து கொண்டு தனியாக சென்று அவர்களை மட்டும் போட்டோ எடுப்பதை வேலையாக் கொண்டிருந்தார் இயக்குனர் ராஜகுமாரன்.

ஒரு நாள் இப்படியே செய்து கொண்டிருந்ததால் காலையிலிருந்து மதியம் வரை படபிடிப்பே நடக்கவில்லை. இதனால் காத்திருந்து காத்திருந்து கடுப்பாகி விட்டனர் விக்ரமும் சரத்குமாரும், இந்த நிலையில் இயக்குனரை அழைத்த சரத்குமார் காதல் பண்றதுக்கு படபிடிப்பு தளம்தான் உங்களுக்கு கிடைத்ததா? என சத்தம் போட துவங்கியுள்ளார்.

இதை பார்த்த தேவயானி இயக்குனருக்கு சப்போர்ட் செய்து கொண்டு பேச தொடங்கியுள்ளார். ராஜகுமாரனுக்கு அப்போதுதான் தேவயானியும் தன்னை காதலிக்கிறார் என்கிற விஷயம் தெரிந்துள்ளது. இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Published by
Rajkumar

Recent Posts