More
Categories: Cinema News latest news

சிம்புவே சொல்லிட்டாரு… இனிமே அவர் வேற மாதிரிதான் பார்க்க போறோம்….

படப்பிடிப்பு சரியாக வர மாட்டார்… ஏதோ ஒரு வகையில் இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார் என திரையுலகில் கெட்ட பெயர் வாங்கியர் நடிகர் சிம்பு. இதன் காரணமாகவே அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். சிலர் மட்டும் துணிச்சலாக அவரை வைத்து படம் எடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக சிம்புவின் மார்கெட் அதாள பாதாளத்திற்கு சென்றது. அவருக்கு பின்னால் வந்த தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பல கோடி சம்பளத்திற்கு சென்றுவிட்ட நிலையில் சிம்பு ரூ.6 கோடி சம்பளம் பெற்றுத்தான் மாநாடு படத்தில் நடித்தார். இப்படத்தின் வெற்றி அவரின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. எனவே,தற்போது சிம்புவும் தனது சம்பளத்தை ஏற்றியுள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில், சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த நடிகர் சிம்பு ‘ இனிமேல் நான் வித்தியாசமாக எதாவது செய்தால் மட்டுமே சினிமாவில் இருக்க முடியும் என்பதை புரிந்துகொண்டேன். கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் ஒரு புதிய சிம்புவை பார்ப்பீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts