Categories: latest news

Suriya: சூர்யாதான் என் தகப்பன்சாமி.. இன்னமும் திட்டு வாங்குறேன்.. கொட்டிட்டாரே சிவக்குமார்

Suriya:

தமிழ் சினிமாவில் 60 வருடங்களை கடந்து அனைவருக்கும் ஒரு உதாரணமாக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவக்குமார். உன்னதமான நடிகர். எந்தவொரு கெட்டப்பழக்கமும் இல்லாதவர். கந்தன் கருணை திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமிருந்து பாராட்டை பெற்றார். அந்தப் படத்தில் உண்மையிலேயே முருகனை பார்த்ததை போல இருக்கும்.

கிட்டத்தட்ட 60 வருடங்களாக இந்த சினிமாவில் சர்வே செய்து வருகிறார் சிவக்குமார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்பம், மகன்கள், மனைவி, பேரக்குழந்தைகள் பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். 84 வயதாகி இருக்கும் சிவக்குமார் தினமும் அவரது பேரக்குழந்தைகளை பள்ளியில் விடும் வேலையை பார்த்து வருகிறாராம். வேற யார் போனாலும் அவருக்கு பிடிக்காதாம்.

கிட்டத்தட்ட 2006 ஆம் ஆண்டிலிருந்து சூர்யாவின் குழந்தைகளை பள்ளியில் விடுவதில் ஆரம்பித்து இன்று கார்த்தி மகளை விடுவது வரைக்கும் அவர்தான் கொண்டு போய் விடுகிறாராம். கார்த்தியின் மகளுக்கு 10 வயது இருக்குமாம். காரில் போகும் போது சரஸ்வதி சபதம் போன்ற வரலாற்று படங்களில் இருக்கும் வசனங்களை சொல்லிக் கொடுப்பாராம் சிவக்குமார். அந்த 10 வயது சிறுதி இன்று அழகாக பெரிய வசனங்களை பேசுகிறார் என்று கார்த்தியின் மகளை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார் சிவக்குமார்.

மேலும் சூர்யாவும் கார்த்தியும் சினிமாவில் நடிக்கமாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தாராம் சிவக்குமார். அதிலும் சூர்யா சினிமா பக்கமே எட்டிப்பார்க்கமாட்டார் என்றுதான் நினைத்திருக்கிறார். ஆனால் இன்று சூர்யா தேசிய விருது வாங்கிய நடிகராக மாறியிருக்கிறார். இன்று அவர்தான் எனக்கு தகப்பன் சாமி. நானும் என் மனைவியும் அவர்களுக்கு குட்டீஸ் மாதிரி இருக்கிறோம் என்றும் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.

ஏனெனில் என் மகன்களை வளர்க்கிற வரைக்கும் நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்று கூட கார்த்தி என்னை திட்டுனான். ஒரு ஷூ வாங்க வேண்டும் என கிளம்பினேன். உடனே எதுக்கு நீங்க போய்க்கிட்டு என என்னை திட்டி 20 ஷூவை வரவழைத்தான்.

அதில் ஒரு ஷூவை தேர்ந்தெடுத்து போட்டுக் கொண்டேன் என சிவக்குமார் கூறினார். இதில் என் மனைவி எனக்கு இன்னொரு தாய். 84 வயதிற்கு மேலும் நான் மனைவியுடன் வாழ்கிறேன் என்றால் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் நான் என்று சிவக்குமார் கூறினார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

15 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago