Connect with us

நான் பண்ண அயோக்கியத்தனத்தை சூர்யா பண்ணல!.. சிவக்குமார் ஓப்பன்!…

latest news

நான் பண்ண அயோக்கியத்தனத்தை சூர்யா பண்ணல!.. சிவக்குமார் ஓப்பன்!…

80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் சிவக்குமார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார் சிவக்குமார்.
இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் நடித்த சிந்து பைரவி அவரின் முக்கிய படமாக அமைந்தது.

ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார் சிவக்குமார். அதன்பின் பல படங்களிலும் கதாநாயகி அல்லது கதாநாயகனின் அப்பாவாக நடித்திருக்கிறார். சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அதை நிறுத்திவிட்டார். அவருக்கு பின் அவரின் மகன் சூர்யா, கார்த்தி இருவருமே சினிமாவில் நடிக்க வந்தனர்.

அவர்கள் இருவருமே தற்போது கோலிவுட்டின் முக்கிய நடிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சிவக்குமார் ‘சூர்யா 25 படத்துக்கு மேல நடிச்சிட்டான்.. ஒரு படத்துல கூட ஹீரோயின் மேல படுக்குற மாதிரி ஒரு காட்சியில் கூட நடிச்சதில்லை.. அந்த அயோக்கியத்தனத்தை நான்தான் பண்ணியிருக்கேன்.. எத்தனை கதாநாயகைகளுடன் உருண்டு பிரண்டேன்னு எனக்கே தெரியாது.. ஆனா சூர்யா ரொம்ப டீசன்ட்.. காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் கூட தொடாமதான் நடிப்பான்’ என சொல்லியிருக்கிறார்..

To Top