Categories: latest news

சிவராஜ்குமாருக்கு கேன்சர்.. இப்படி நிலைமையிலும் அவர் செய்த மாபெரும் உதவி

சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல்  சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆறு மாதம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது . தமிழ்நாட்டில் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என எந்த அளவு கொண்டாடி வருகிறோமோ அதைப்போல கர்நாடகாவில் சிவராஜ்குமாரை சூப்பர் ஸ்டார் ஆக மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர் .

அவர் மட்டும் அல்ல அவருடைய மொத்த குடும்பத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் நேசிக்கின்றனர். பழம்பெரும் நடிகரான ராஜ்குமார் கர்நாடகாவில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள நடிகராக இருந்தார். அவரைப் போலவே அவருக்குப் பிறகு புனித் ராஜ்குமார் மற்றும் சிவராஜ் குமார் ஆகிய இருவருமே சினிமாவில் தனக்கென ஒரு தனி அந்தஸ்தை பெற்று தன் தந்தையைப் போல இவர்களும் ஒரு நல்ல மரியாதையில் இருந்து வந்தனர்.

இதையும் படிங்க: அதானே இதுவும் அதான்… சூர்யா44 படத்தின் லீக்கான டைட்டில்… நல்லாவா இருக்கு?

இதில் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானது அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சிவராஜ்குமார் பல படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக ஜெய்லர் படத்தில் அவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தனுசுடனும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் ரவி அரசுடன் ஒரு புதிய படத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்குள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதாக தகவல் வெளியானது. இப்போது வந்த தகவலின் படி சிவராஜ் குமார் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

அதனால் இயக்குனர் ரவியரசுவை தொலைபேசியில் அழைத்து வேண்டுமென்றால் தனுஷிடம் கதையை சொல்லுங்கள். நான் அவரிடம் பேசுகிறேன் .உங்கள் கதையில் அவர் நடிப்பார் என  சிவராஜ்குமார் கூறினாராம் .அது மட்டுமல்ல ராஜ்குமார் மறைவிற்குப் பிறகு அவருடைய மொத்த சொத்தும் அவருக்கு அடுத்தபடியாக அவருடைய பிள்ளைகளுக்கு தான் போய் சேரும்.

இதையும் படிங்க: வந்த நியூஸ் எல்லாமே ஃபேக்!.. செம வொர்க் நடக்குது!. எஸ்.கே.25 பரபர அப்டேட்!…

ஆனால் சிவராஜ்குமார் என்னுடைய உழைப்பில் நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை செலவழித்துக் கொள்கிறேன். தன் அப்பாவால் வரும் சொத்தை முழுவதுமாக அனாதை இல்லங்களுக்கு எழுதி வைத்து விடுகிறேன் என மொத்த சொத்தையும் அனாதை இல்லத்திற்கு எழுதி வைத்துவிட்டாராம் சிவராஜ் குமார். இப்படி ஒரு நல்ல மனிதரை அதிலும் சினிமாவில் காண்பது மிகவும் அரிது என மெய்சிலிர்த்து வருகின்றனர். தனக்கு இப்படி ஒரு நோய் இருந்தும் தன்னை நம்பி வரும் இயக்குனர்  பாதிப்படைய கூடாது என இன்னொரு நடிகரை நடிக்க வைக்க முன் வருகிறார் சிவராஜ் குமார்.

Rohini

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

40 minutes ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

1 hour ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

8 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

9 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

11 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

23 hours ago