More
Categories: Cinema News latest news

என்னோட லவ் ஸ்டோரி பத்தி தெரியனும்னா அந்தப் படத்தை பாருங்க! தன் காதலியை பற்றி மனம் திறந்த எஸ் ஜே சூர்யா

Actor SJ Surya: தமிழ் சினிமாவில் இப்போது ஒரு தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. ஒவ்வொரு இயக்குனருக்குள்ளும் ஒரு நடிகர் இருப்பான் என்று சொல்வார்கள். அதே போல் எஸ்.ஜே.சூர்யாவும் இரண்டே படங்களை இயக்கினாலும் தனக்குள் ஒரு அபாரமான நடிகரை வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நடிப்பு அரக்கன் என்ற பெயரே அவருக்கு அடைமொழியாகி விட்டது. அந்தளவுக்கு நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா 2 படத்தில் கூட எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைத்தான் அனைவரும் பாராட்டினார்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ரம்பாவை டிரெயினில் போட்டு புரட்டிய லைலா… ஆனா அதுக்கு காரணம் கேட்டா தான் ஷாக் ஆகிடுவீங்க..!

அதற்கு முன் வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் அவரின் நடிப்புதான் வெளியில் பேசப்பட்டது. இந்த நிலையில் 40 வயதுக்கு மேலாகியும் இன்னும் திருமணமாகாமல் தனிக்காட்டு ராஜாவாகத்தான் சுற்றி வருகிறார் எஸ்.ஜே,சூர்யா.

எப்போது திருமணம் என்று கேட்டால் அது நடக்கும் போது நடக்கும். அதுவரை ஒரு பேச்சுலராக சந்தோஷமாக இருந்து கொள்கிறேன் என்று கூறுவார். ஆனால் ஒரு பேட்டியில் தன் காதல் கதையை கூறியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா  நடிப்பில் வெளிவந்த படமான அன்பே ஆருயிரே திரைப்படத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

இதையும் படிங்க: பத்மினியிடம் பளாரென அறை வாங்கிய சிவாஜி!.. எம்.ஜி.ஆர் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்

இருக்கு ஆனா இல்ல என்ற வசனம் அந்தப் படத்தில் இருந்து தான் மிகவும் பிரபலமானது. தன்னுடைய உண்மையான லவ் ஸ்டோரியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்தப் படத்தை பாருங்க என அந்தப் படத்தில் எப்படி காதல் கதை அமைக்கப்பட்டிருக்கிறதோ அதே தான் அவர் வாழ்க்கையிலும் நடந்ததாம்.

ஒரு சமயம் இரவு விருந்துக்காக அவருடைய காதலி ஏற்பாடு செய்திருந்தாராம். அதே நேரத்தில் தான் ஒரு பெரிய தயாரிப்பாளர் படத்தை பற்றி பேச வரச் சொன்னாராம். இரவு விருந்திற்கு சென்ற எஸ்.ஜே.சூர்யா அவருடைய காதலியிடம் ஒரு அவசரமான வேலை இருக்கிறது என சொல்லிவிட்டு சென்று விட்டாராம்.

இதையும் படிங்க: அழகா இருக்கீங்க! உங்கள கட்டிக்கப் போறவன் குடுத்து வச்சவன் – ரஜினி சொன்ன அந்த நடிகை

மீட்டிங் முடிந்து இரவு 12 மணிக்கு அவர் காதலியின் வீட்டை தட்டினாராம் எஸ்.ஜே,சூர்யா. அதற்கு அவருடைய காதலி ‘இது ஒன்றும் சத்திரம் இல்லை’ என சொல்லிவிட்டு கதவை மூடிவிட்டாராம். இப்படி தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவமாக இதை பற்றி கூறியிருந்தார்.

Published by
Rohini

Recent Posts