Connect with us
suriya

Cinema News

விஜய் பெயரை சொல்ல தயங்கிய சூர்யா..! விவாத பொருளான சூர்யாவின் பேச்சு… அப்படி என்ன கூறினார்?

கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான படம் தான் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக உருவாகியுள்ளது.

மேலும் இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் படம் வெளியானதால் சூர்யா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சமீபத்தில் கேரளா சென்றிருந்தார்.

 

தமிழ் நடிகர்களுக்கு எப்போதுமே கேரளாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு கேரளாவில் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. சூர்யாவிற்கும் ஓரளவிற்கு கேரளாவில் ரசிகர்கள் உள்ளதால் அவரே நேரில் சென்று தனது எதற்கும் துணிந்தவன் படத்திற்காக புரமோஷன் செய்தார்.

அப்போது ரசிகர்கள் மத்தியில் சூர்யா பேசியது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. அப்படி என்ன பேசினார் என்று தானே யோசிக்கிறீர்கள். அதன்படி சூர்யா பேசியதாவது, “நேருக்கு நேர் படத்தின் போது ரசிகர்கள் மற்ற ஒரு நடிகருக்கு கொடுத்த ஆதரவு எனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுடன் இணைந்து விஜய்தான் நடித்திருந்தார் என்பது ஊருக்கே தெரியும். இப்படி உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு கிடைத்த ஆதரவை சூர்யா ஏன் இப்படி மறைமுகமாக கூற வேண்டும். நேரடியாக விஜய் என்றே கூறி இருக்கலாமே? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விஜய்யின் பெயரை கூட சொல்ல சூர்யா இப்படி தயக்கம் காட்டுவது ஏன் என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் இவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை இருக்குமா? என்றெல்லாம் கூட பேசி வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top