மருத்துவமனையில் விஜயகாந்த்!.. முந்திக் கொண்ட சூர்யா.. இன்னும் விஜய்க்கு மனசு வரலையேப்பா?..

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது திரைத்துறையினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து நடிகர் சங்க தலைவரான நாசர் உள்ளிட்ட சில பிரபலங்கள் அவரை காண மருத்துவமனைக்குச் சென்றனர்.

இதையும் படிங்க: இப்பதான் கபாலி, விக்ரம்!.. 70 வருடங்களுக்கு முன்பே படத்தை வேற லெவலில் விளம்பரம் செய்த ஏவிஎம்!..

ரசிகர்கள் பலரும் விஜயகாந்த் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா விஜயகாந்த் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது.

பெரியண்ணா:

1999ம் ஆண்டு நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த பெரியண்ணா படத்தில் சூர்யா நடித்திருந்தார். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஒரு பாடலை விஜய் பாடியிருப்பார். சூர்யாவுக்கு சினிமாவில் தனது மகன் விஜய்க்கு கிடைத்ததை போலவே விஜயகாந்தின் ஆதரவு கிடைக்க வேண்டும் என எஸ்.ஏ. சந்திரசேகர் மெனக்கெட்டு இருப்பார். விஜயகாந்த் தனது படங்களில் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்களை வளர்த்து விட்டு அழகு பார்த்தவர்.

இதையும் படிங்க: கையே இரும்பு மாதிரி!. அவரா இப்படி?.. பாக்கவும் விடமாட்றாங்க!. புலம்பும் வாகை சந்திரசேகர்…

சூர்யா வேண்டுதல்:

”அண்ணன் விஜயகாந்த் விரைவில் நலம் பெறப் பிரார்த்தனை செய்யும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!

கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் விஜயகாந்தை குணமாக்க உதவும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!” என நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு என்ன ஆச்சு?:

அப்பா சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, செந்தூரப் பாண்டி படங்களில் விஜய்யை நடிக்க வைக்க விஜயகாந்த் சம்மதம் தெரிவித்து அவருக்கு சினிமாவில் ஓபனிங் கொடுத்தார் விஜயகாந்த். ஆனால், தற்போது அவர் தீவிர சிகிச்சையில் இருக்கும் போது மருத்துவமனைக்கு சென்று பார்க்காமலும் ஒரு ட்வீட் கூட போடாமலும் விஜய் ஏன் உள்ளார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

Related Articles

Next Story