Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு பெரிய உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஒரு ஆக்சன் ஹீரோவாக சமீப கால ஆக்சன் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்திருக்கிறார். யாரும் எளிதாக தொட முடியாத ஒரு இடத்தில் இருக்கிறார் அஜித். அவருடைய லைஃப் ஸ்டைலும் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.
பெரும்பாலும் தனியாகவே பயணிப்பது என தனக்கு பிடித்தமான வேலையை செய்து கொண்டு தனக்கான ஒரு வாழ்க்கையை வாழும் ஒரு மனிதராகவே சமீப காலமாக காணப்படுகிறார் அஜித். அதே நேரம் குடும்பத்தை ஷாலினி கவனித்துக் கொள்ள வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் அஜித் அவ்வப்போது சென்னைக்கு வந்து தன் குடும்பத்தை பார்த்துவிட்டு செல்கிறார் .
இதையும் படிங்க: என்னையே கேட்ட பிரபல இயக்குனர் அந்த நடிகையுடன் படுக்கையில் ஓவர் டோஸில் இறந்தார்… நடிகை ஷாக்
அஜித் படங்களை பொருத்தவரைக்கும் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடப்பதே இல்லை. வெளிநாடுகளில் தான் நடக்கிறது. அதைத்தான் அஜித்தும் விரும்புகிறார். இங்கு ஃபேன்ஸ் தொல்லைகள் அதிகமாக இருப்பதினால் சுதந்திரமாக படப்பிடிப்பை நடத்த முடியாது என்ற காரணத்தினால் தான் அஜித் படங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் நடக்கிறது .
அவரைப் பற்றி என்ன ஒரு விமர்சனம் வந்தாலும் அதை பற்றி அவர் என்றைக்குமே கவலைப்பட்டது கிடையாது. என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கிணங்க அவர் அவருடைய வழியில் சென்று கொண்டே இருக்கிறார்.
இதையும் படிங்க: மூனு வேளை சாப்பட்டுக்கே கஷ்டப்பட்ட நடிகர் திலகம்!.. ஒரு பிளாஷ் பேக்!…
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் சுவாமிநாதன் அஜித்தை பற்றி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். சுவாமிநாதன் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் பெரும்பாலும் சந்தானம் படங்களில் அதிகமாக நடித்து வருபவர் .
அது மட்டுமல்லாமல் விஜய் அஜித் ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். என்னதான் பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்திருந்தாலும் அவர்களில் மிகவும் பெஸ்ட் அஜித் தான் என கூறி இருக்கிறார் சுவாமிநாதன்.
இதையும் படிங்க: அஜித் சொன்ன அந்த வார்த்தை! அதான் தல.. கௌதம் வாசுதேவ் மேனன் பெருமிதம்
ஏனென்றால் எந்த நடிகருமே அவ்வளவு சீக்கிரம் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் நெருங்கி வந்து பேச மாட்டார்கள். ஆனால் அஜித் தோள்மேல் கைய போட்டே பேசுவார். தானாக வந்து உட்கார்ந்து கூட நடிக்கும் சகா நடிகர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். இந்த பண்பை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.மிகவும் பணிவாக நடந்து கொள்வார் என்று கூறினார்.
ஒரு சமயம் எதை நினைத்து கேட்டார் என தெரியவில்லை .நிறைய நடிகர்களுடன் நடித்து இருப்பீர்கள் இல்லையா என கேட்டாராம் .அதற்கு சுவாமிநாதன் எத்தனை நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இந்த அளவு என்னிடம் யாரும் க்ளோஸ் ஆனதே கிடையாது என்று சொன்னாராம் சுவாமிநாதன் .யாராக இருந்தாலும் அஜித் உடனே அவர்களுடன் நெருங்கி பழகி விடுவார், சகஜமாக பேசுவார் என கூறினார்.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…