---Advertisement---

விஜய்யுடன் நடனமாட மறுத்த பிரபுதேவா: போக்கிரி படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த வையாபுரி!

Published on: April 7, 2026
actor vaiya puri
---Advertisement---

விஜய் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் போக்கிரி. சூப்பர்ஹிட் ஆன அந்த படத்தை பிரபுதெவா இயக்கியிருந்தார். அசினி, வடிவேலு, வையாபுரி மர்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பல்ர் நடித்திருந்தனர்.

போக்கிரி படத்தில் இடம்பெற்ற ஆடுங்கடா என்ன சுத்தி ஒரு பாடலில் விஜய்யும் பிரபுதேவாவும் இணைந்து ஆடிய நடனம் இன்றளவும் ரசிகர்களிடையே ரசிக்கப்படுகிறது. அந்த நடனக் காட்சி உருவானதற்குப் பின்னால் ஒரு சம்பவம் நடந்திருப்பதாக நகைச்சுவை நடிகர் வையாபுரி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

போக்கிரியில் அந்த பாடல்காட்சி படமாக்கப்படும்போது விஜய்க்கு பிரபுதேவாவுடன் நடனமாட வேண்டும் என்று ஆசைபட்டார். அதனை நேரடியாகக் கூறத் தயங்கிய விஜய், பிரபுதேவாவிடம் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய நடிகர் வையாபுரியிடம் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ஆசையைப் புரிந்துகொண்ட வையாபுரி, நடிகர் ஸ்ரீமனுடன் இணைந்து பிரபுதேவாவிடம் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு பிரபுதேவா சம்மதிக்கவில்லை. இருந்தாலும் விடாம இருவரும் தொந்தரவு செய்ததால் பிரபுதேவா சம்மதித்தார். இந்தச் செய்தி விஜய்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த நடனக் காட்சியின் இருவரும் அணிந்திருந்த ஆடையை கடையில் சென்று வாங்கித் தந்ததே நான்தான் என வையாபுரி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.