தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது சட்டமன்ற தேர்தலை அவரின் கட்சி சந்திக்கவிருக்கிறது. எனவே தேர்தல் தொடர்பான பணிகளில் விஜய் வேகம் காட்டி வருகிறார். சில நாட்கள் அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், விஜயிடம் பல வருடங்கள் மேனேஜராக பணிபுரிந்து பிடி செல்வகுமார் விஜயி பற்றி பல முக்கிய தகவல்களை ஊடகங்களிடம் சொல்லி வருகிறார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பேட்டி செல்வகுமார் ‘விஜயின் போக்கிரி திரைப்படம் தியேட்டரில் வெளியான சமயத்தில் தியேட்டர்களின் டிக்கெட் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்கிற என பலரும் கோரிக்கை வைத்தார்கள். அப்போது கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தார். டிக்கெட் கட்டணத்தை குறைக்கவேண்டுமென அவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அவரும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிவு செய்தார்..
இது தெரிந்ததும் பதிறிப்போன விஜய் கலைஞரின் வீட்டுக்கே போய் அவர் காலையிலே விழுந்து விட்டார்.. ‘டிக்கெட் கட்டணத்தை குறைக்காதீங்க’ என கோரிக்கை வைத்தார்.. ‘ஏன்யா அப்டி சொல்ற?.. டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் நிறைய பேர் படம் பார்க்க வருவார்கள்’ என்று கலைஞர் சொன்னார். ஆனால் விஜயோ ‘நீங்க டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் என் சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள்.. எனக்கு குறைவான சம்பளம்தான் கொடுப்பார்கள்’ என ஒப்பாரி வைத்தார்.
இதுதான் விஜயின் குணம். விஜய் எப்போதுமே ஒரு சுயநலவாதி.. தன்னைப் பற்றி மட்டும்தான் யோசிப்பார்.. பொதுநலமாக எதையுமே யோசிக்க மாட்டார்.. இப்படிப்பட்ட ஒருவர் அரசியலுக்கு வந்து என்னத்தை கிழிக்க போகிறார்?’ என்று பேசியிருக்கிறார்..
மேலும், விஜயின் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு போயிருக்காங்க. அவங்களுக்கு செட்டில்மெண்ட் கூட கொடுக்க விஜய் விரும்பமாட்டார். அவரின் பெற்றோர்களுக்கு எதுவும் செய்யமட்டார். 27 வருடங்கள் அவரிடம் வேலை செய்தேன். அந்த வேலையை விடும்போது ஒரு பைசா எனக்கு கொடுக்கவில்லை.. அதுதான் விஜயின் குணம். அவர் எப்போதும் யாருக்கும் எதுவும் செய்யமாட்டார்’ என செல்வகுமார் பேசியிருக்கிறார்.





