Connect with us
vijay

Cinema News

போன இடத்தில் உத்திரவாதம் கொடுத்தாரா விஜய்? கேப்டன் வீட்டில் நடந்தது என்ன?

Vijay:நேற்று கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பான ஒரு செய்தி மிகவும் வைரலானது. நடிகர் விஜய் தன்னுடைய கோட் திரைப்பட குழுவுடன் சேர்ந்து விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவருடைய திருவுருவ படத்திற்கு மலர்களை தூவி ஆசீர்வாதம் பெற்று அவர்கள் குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு அவரை ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் கோட் திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. கோட் திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் அதற்கு முன் அவர் வீட்டிற்கு சென்று அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெறவும் வாழ்த்துக்களை பெறவும் விஜய் மற்றும் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றனர்.

இதையும் படிங்க: உடம்பு இப்படி போனதுக்கு காரணம் நான் பண்ண அந்த தப்பு! இப்படியா செய்வீங்க கீர்த்தி?

இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் பலவித கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர ஆரம்பித்தனர். இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறிய சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது .முதலில் இந்த புகைப்படத்தை பார்த்ததும் தேமுதிகவும்  தவெகவும் கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த சந்திப்பு முழுக்க முழுக்க படம் சம்பந்தமான ஒரு சந்திப்பாகவே மாறி இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். மேலும் விஜயகாந்தின் இரு மகன்களுடன் மிகவும் அக்கறையுடன் பேசிக் கொண்டிருந்தாராம் விஜய் .இது விஜய் அடுத்து நடிக்க போகும் தளபதி 69 ஆவது படத்தில் விஜயகாந்த் மகனான சண்முக பாண்டியனை நடிக்க வைக்கும் நோக்கில் கூட இருக்கலாம் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

இதையும் படிங்க : இது சாதாரண ஸ்குவாடு இல்ல.. போட்டோ போட்டு கெத்து காட்டிய ‘விடாமுயற்சி’ டீம்

ஏனெனில் தன்னுடைய சினிமா கெரியரில் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் செந்தூரப்பாண்டி. அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் என அனைவருக்கும் தெரியும். அந்த நன்றி கடனை தீர்க்கும் பட்சத்தில் விஜய்க்கு இன்னும் பாக்கி இருப்பது அவருடைய 69 ஆவது படம் மட்டும்தான். அதனால் அந்தப் படத்தில் சண்முக பாண்டியனை நடிக்க வைக்க விஜய் ஒரு வகையில் எண்ணி இருக்கிறார் என தெரிவதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

அது சம்பந்தமாக கூட விஜயகாந்த் மகன்களுடன் விஜய் பேசி இருப்பார் என தெரிவதாக அந்தணன் கூறினார். மேலும் நேற்று இன்னொரு சம்பவமும் நடந்தது. வரும் 22ஆம் தேதி விஜய் அவருடைய கட்சி கொடியை அறிமுகப்படுத்த இருக்கிறார். அதனால் அதற்கு ஒத்திகையாக நேற்று அவருடைய அலுவலகத்தில் ஒரு மஞ்சள் நிறக் கொடி ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: வாயா பேசுற நீ? திரிஷாவுக்கு கவுண்டர் கொடுத்த உதவி இயக்குனரை நடிக்க வைத்த மணிரத்னம்!..

ஆனால் அந்த மஞ்சள்  நிறக் கொடிக்கு பின்னணியில் புஸ்ஸி ஆனந்த் இருப்பதாக தெரிகிறதாம். ஏனெனில் புஸ்ஸிஆனந்தின் குலதெய்வ சாமியின் கலரும் மஞ்சள் சிவப்பு சம்பந்தப்பட்ட கலர் தானாம். அதனுடைய ஒரு பிரதிபலிப்பாகவே இந்த கொடி இருப்பதாகவும் இணையத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் போது இது வெறும் ஒத்திகை தான். 22ஆம் தேதி அந்த கொடியின் நிறமும் மாறலாம் என அந்தணன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top