More
Categories: Uncategorized

விஜய் கூப்பிட்டு படம் கொடுத்தார்! பாவி குடிச்சுட்டு போனேன்.. இப்போது புலம்பும் இயக்குனர்!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் தற்போது ஒரு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வரும் நடிகராக விஜய் இருக்கிறார். இவரை நம்பித்தான் இன்னும் சினிமா ரசிகர்களே இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்தளவுக்கு அத்தனை பேரையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு மாபெரும் நடிகராக விஜய் இருக்கிறார்.

தற்போது விஜய் அரசியலில் குதிக்க இருப்பதால் சினிமா உலகம் என்னாவாகும் என்று பலரும் புலம்பி வருவதை நம்மால் பார்க்க முடிகின்றது. இது சினிமாவிற்கே உண்டான பெரிய லாஸ் என்று பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: அந்த பாட்டை கண்ணதாசன் தான் எழுத வேண்டும்… அடம் பிடித்த எம்ஜிஆர்.. அதிர்ந்த படக்குழு…

இப்படி பட்ட விஜயை இயக்கும் வாய்ப்பு வந்தும் தன் குடியால் அந்த வாய்ப்பை இழந்திருக்கிறார் ஒரு இயக்குனர். அவர் முரளி மற்றும் சுவலெட்சுமி நடிப்பில் வெளியான தினந்தோறும் படத்தை இயக்கிய நாகராஜன். ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு குடிப்பழக்கமும் இருப்பதால் ஏராளமான பல நல்ல வாய்ப்புகளை இழந்திருக்கிறார். ஒரு சமயம் எஸ்.ஏ.சி இவர் சொன்ன கதையில் ஈர்க்கப்பட்டு விஜயின் கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார். ஆனால் மறு நாள் விஜயை பார்க்க போகும் போது நாகராஜன் முழுவதுமாக மது குடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க: வேட்டையன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வெளியான சூப்பர் அப்டேட்… ரிலீஸ் எப்போ தெரியுமா?

naga

உடனே அவர்கள் ஷாக் ஆகி என்ன இதெல்லாம் என கேட்க அதற்கு நாகராஜன் ‘இதுல என்ன தப்பு? வேலையில கரெக்டா இருப்பேன்’ என சொல்லியிருக்கிறார். ஆனால் இதை விஜய் தரப்பு ஏற்க மறுத்ததால் நாகராஜனுக்கு விஜயை இயக்கும் வாய்ப்பு பறி போயிருக்கிறது.

Published by
Rohini

Recent Posts