Connect with us
vijayakanth

Cinema News

புது வீடு… மகனின் திருமணம்.. விஜயகாந்துக்கு நிறைவேறாமல் போன ஆசைகள்..

Viyakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் மருத்துவமனையில் மரணமடைந்த திரையுலகினருக்கு மட்டுமில்லமால், அவரின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், மனிதாபிமானம் மிக்க, பிறருக்கு உதவும் குணம் கொண்ட, எல்லோருடன் அன்புடன் பழகும் ஒரு மனிதாரகத்தான் அவர் எல்லோர் மனதிலும் அறியப்பட்டிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 2015க்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. கடந்த சில வருடங்களாக அரசியல் மேடைகளிலும் பேசவில்லை. கடைசியாக அவர் பேசியது கலைஞர் இறந்தபோது வெளிநாட்டில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோதான்.

இதையும் படிங்க: இவரா சார் வில்லன்?!.. விஜயகாந்தின் உடலை விட்டு நகராமல் நிற்கும் மன்சூர் அலிகான்..

அப்படி இருந்தும் அவரின் மரணத்திற்காக நாடே வருத்தப்படுகிறது எனில் அவர் வாழ்ந்து சென்று வாழ்வு அப்படி. எனது இடத்திற்கு யார் வந்தாலும் அவமானபடக்கூடாது, பசியோடு திரும்பி செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால்தான் அவருக்காக இத்தனை பேர் கண்ணீர் வடிக்கிறார்கள்.

பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் சஜகமாகவும், எளிமையாகவும் பழகும் அவரின் குணம் மிகவும் அரிதானது. அதனால்தான் அவரின் இறப்புக்காக பொதுமக்கள் கூட வருத்தப்படுகிறார்கள். நேற்று தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் இப்போது சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: செந்தூரப்பாண்டியை பார்க்க வந்த தம்பி விஜய்!.. அந்த 10 செகண்ட் கடைசியா பார்த்து கண் கலங்கிட்டாரே!

விஜயகாந்த் கடைசிவரை வசித்தது சாலிகிராமத்தில் இருந்த அந்த வீடுதான். ஆனால், ரசிகர்களும், தொண்டர்களும் அதிகம் பேர் வருவதால் அந்த வீடு போதவில்லை. எனவே, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் ஒரு பெரிய வீட்டை விஜயகாந்த் கட்டி வந்தார். 10 வருடங்களுக்கு முன்பே அந்த வேலை துவங்கியது. ஆனால், சில தடைகள் ஏற்பட்டு வேலை நின்று போனது. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது.

தொண்டர்களுக்காக இந்த வீட்டில் சென்று வசிக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசையாக இருந்துள்ளது.  மேலும், அந்த வீட்டில் தனது மூத்த மகன் விஜய பிரபாகரனின் திருமணத்தை நடத்தவும் அவர் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அவரின் ஆசைகள் கடைசிவரை நிறைவேறாமலே போய் விட்டதுதான் சோகம்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரமாட்டார் வடிவேலு!. அவ்வளவு மோசமானவரா வைகைப்புயல்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top