3 ஆயிரம் சம்பளம்!. ஜாலியா குடிப்பேன்!. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே விமல்!..

by சிவா |   ( Updated:2025-04-07 03:46:01  )
vimal
X

Actor vimal: கூத்துப்பட்டறையில் நடிப்பை கற்றுக்கொண்டவர் விமல். பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அடுத்து அவர் ஹீரோவாக நடித்து வெளியான களவாணி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான விமல் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

விமலின் உருவம் மற்றும் அவர் பேசும் பாஷை ஆகியவை கிராமத்து கதைகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருந்ததால் அப்படிப்பட்ட கதைகளிலேயே அதிகம் நடித்தார் விமல். அதேநேரம், சென்னையில் நடக்கும் கதையாக வெளிவந்த மஞ்சப்பை படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இந்த படத்தில் விமலின் தாத்தாவாக ராஜ்கிரண் நடித்திருந்தார்.

நிஜ வாழ்க்கையில் களவாணி படத்தில் நடந்தது போலவே காதலித்த பெண்ணை காரில் அழைத்து சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் விமல். நிறைய தோல்விப் படங்களில் நடித்து மார்க்கெட்டை இழந்தார். சுந்தர் சி இயக்கத்தில் நடித்த கலகலப்பு படம் வெற்றி பெற்றது.

vimal

மன்னர் வகையறா படம் மூலம் தயாரிப்பாளராக மாறி சில கோடிகள் நஷ்டம் அடைந்தார். அதன்பின் அந்த கடன்களை அடைத்தார். விமல் நடிப்பில் வெளிவந்த விலங்கு வெப்சீரியஸ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்போது தேசிங்கு ராஜா 2, பரமசிவன் பாத்திமா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவரின் நடிப்பில் உருவான ஓம் காளி ஜெய் காளி என்கிற வெப் சீரியஸும் சமீபத்தில் வெளியானது. ஆனால், இது விலங்கு போல வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விமல் ‘ஆண்டவன் புண்ணியத்தில் ஹீரோ ஆவதற்கு முன்பும் சரி. இப்போதும் சரி எனக்கு பண கஷ்டமே வந்தது இல்லை. ஏன்னா நான் பணத்தை எதிர்பாக்குறதே இல்லை. கூத்து பட்டறையில் வேலை செய்யும்போது 2 ஆயிரம்தான் சம்பளம். அத வச்சிக்கிட்டு ஜாலியா ஊர் சுத்துவேன். குடிப்பேன். எனக்கு ஏத்த மாதிரி காசு வேணும்னு எதிர்பார்க்க மாட்டேன். காசுக்கு ஏத்த மாதிரி இருப்பேன். 3 ஆயிரம் வாங்குனப்போ எப்படி இருந்தேனோ இப்ப கோடியில் சம்பளம் வாங்கும்போதுதான் அப்படிதான் இருக்கேன்’ என பேசியிருக்கிறார்.

Next Story