Connect with us

Cinema News

நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டா செருப்பால அடிங்க!.. பொங்கும் விஷால்!…

சினிமாவுக்கு நடிக்க வரும் பெண்களை சிலர் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் என்பது பல வருடங்களாகவே இருக்கிறது. பாலிவுட், கோலிவுட், கேரளா, ஆந்திரா என எல்லா மொழிகளிலும் இந்த பிரச்சனை உண்டு. சில வருடங்களுக்கு முன்பு பாடகி சினிமாயி மீ டூ என்கிற ஹேஷ்டோக்கோடு சில விஷயங்களை சொன்னார்.

அதன்பின் திரையுலகை சேர்ந்த பலரும் மீ டூ என்கிற ஹேஷ்டேக்கில் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் பற்றி சமூகவலைத்தளங்களில் பேசினார்கள். பாலிவுட்டிலிருந்து அதிக நடிகைகள் இதுபற்றி சொன்னார்கள். அந்த விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கோட் படத்துக்கு வந்த புது சிக்கல்… என்ன சொல்கிறார் திரையரங்கு உரிமையாளர்?

இந்நிலையில், இப்போது மலையாள சினிமா உலகில் பாலியல் புகார்கள் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. கேரள அரசால் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி சில வருடங்களுக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்தது. இதை அரசு தரப்பில் வெளியிடவில்லை. ஆனால், தகவல் கோரும் உரிமை சட்டம் மூலம் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளிவந்திருக்கிறது.

ஏற்கனவே AMMA என்கிற நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகரும், எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு பாட்டா?!.. இளையராஜாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய இயக்குனர்!..

மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் உள்ள முக்கிய உறுப்பினர்கள் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார்கள். இந்த சங்கத்தின் தலைவரான மோகன்லாலும் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பல வருடங்களாகவே நடிகைகள் கொடுக்கும் பாலியல் புகார்கள் மீது நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதே கோலுவுட் நடிகைகளின் குரலாக இருக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘கண்டிப்பாக ஹேமா கமிட்டி போல நடிகர் சங்கம் சார்பாக தமிழ் சினிமாவிலும் ஒன்றை அமைப்போம்.

அது எங்கள் கடமை. பெண் நடிகைகளுக்கு நடிகர் சங்கர்ம் இருக்கிறது என்கிற நம்பிக்கையை கொடுப்போம். இதில் முக்கியமானது என்னவெனில், வாய்ப்புக்காக பெண்களை பயன்படுத்த சிலர் நினைத்தால் சம்பந்தப்பட்ட அந்த பெண் தைரியமாக இருக்க வேண்டும். படுக்கைக்கு அழைப்பவனை செருப்பால் அடிக்க வேண்டும்’ என சீறியுள்ளார் விஷால்.

google news
Continue Reading

More in Cinema News

To Top