More
Categories: Cinema News latest news

விஷால் சரியான விஷம்.. இதனாலதான் சண்டையே வந்துச்சி.. கோபத்தில் வெடித்த அப்பாஸ்!..

நடிகர் அப்பாஸ் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் போது, விஷாலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தான் அவர் வெளிநாட்டிற்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் என்ற செய்தி பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அப்பாஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் போது, எனக்கும் விஷாலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான்.

ஆனால் நான் அதற்காக வெளிநாட்டிற்கு போகவில்லை. அந்த சமயத்தில் நான் சில விழாக்கள், ஈவண்ட்களை எடுத்து நடத்திகொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் சிசிஎல் நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் சிசிஎல் நடத்த ஸ்பான்சர் கிடைக்கவில்லை. எனவே போட்டியை நிறுத்திவிடலாம் என்று திட்டமிட்டார்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க- எப்பா கிணத்த காணோம்பா கதையால போச்சு! நம்ப வச்சு ஏமாத்திட்டாரே நெல்சன்?

வேண்டாம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடங்குங்கள் என்று கூறிவிட்டு, பாம்பேயில் நான் சல்மான் கானிடமும், ஆந்திராவில் நடிகர் வெங்கடேஷிடமும், கர்நாடகாவில் நடிகர் சுதீபிடமும் இது பற்றி பேசி பாலிவுட் vs தென் இந்தியா என்ற அடிப்படையில் முதலில் போட்டி நடத்தினோம். இதனை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்றும் கூறியிருந்தோம். தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினார்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.

2 முறை சிசில் போட்டியில் நான் பங்கேற்றேன். மூன்றாவது முறை வெளியேறிவிட்டேன். அதற்கு காரணம் விஷால் தான். சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் யாரோ அவரின் தலையில் விஷத்தை ஏற்றிவிட்டனர். அதனால் அவர் என்னை தவறாக புரிந்துகொண்டு மற்றவர்களிடமும் என்னை பற்றி தவறாக கூறி வந்தார். அதனால் நான் அதிலிருந்து விலகிவிட்டேன்.

நான் எல்லா மாநில நடிகர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தேன். இந்த பிரச்சனையால் அணியில் சகோதரத்துவன், கலகலப்பு எல்லாம் போய்விட்டது. எனவே நானும் வெளியேறிவிட்டேன். அதன் பிறகு விஷாலிடம் பேசவே இல்லை என்று அப்பாஸ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- மற்ற மொழில் சூப்பர் ஹிட்டாகி தமிழில் ஃபிளாப் ஆன 5 படங்கள்!.. தளபதியும் இதுக்கு தப்பலயே!..

Published by
prabhanjani

Recent Posts