‘ஆப்பிள் பெண்ணே” என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
கேரளத்து பெண் குட்டியான இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். இப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை.
எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
பொல்லாதவன் படம்…
இந்த பொங்கலுக்கு…
தலைவர் தம்பி…
ஜீவாவுக்கு கடந்த…