இது ஒன்னே போதும் செல்லம்!...ஆண்ட்ரியாவிடம் சரண்டர் ஆன நெட்டிசன்கள்.....

பாடகி, நடிகை, பின்னணி குரல் கொடுப்பவர், இசை கலைஞர் என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. பாடகியாக இருந்த ஆண்ட்ரியா ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அடுத்து அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை, மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
நடிப்பது மட்டுமில்லாமல் திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார்.மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் ரசிகர்களை கவரும் வகையில் அழகான மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.