வாளிப்பான தேகம் கண்ணில் சிக்காதா என இன்றைய இளைஞர்கள் பலரும் பல இரவுகள் ஏங்கித் தவிப்பதுண்டு. சிலர் யாரையாவது பார்த்துவிட்டால் இன்னைக்கு இரவு விருந்து இவர் தான் என மனதுக்குள் சந்தோஷம் கொள்வர். அந்த அளவு நடிகைகள் ரசிகர்களை நெஞ்சம் கொண்டு ஈர்க்கின்றனர்.
தங்களது பால்வண்ண பளிங்கு மேனியையும் கட்டழகையும் போட்டிப் போட்டுக்கொண்டு சோஷியல் மீடியாவில் அதுவும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் காட்டுகின்றனர். வாய்ப்பு இல்லாத நடிகைகள் போடும் தூண்டில் இந்த இன்ஸ்டாகிராம் தான்.
அந்த வகையில் அழகைத் தூக்கலாகக் கொண்டுள்ள ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். தமிழ் மொழியை நன்றாகப் பேசுவார். பிறந்தது கேரளா என்றால் எப்படி இவ்ளோ சூப்பரா பேசுறாங்க…என்றால் வளர்ந்தது ஈரோட்டில் தானே…!!! சரி…இப்போது இவரைப் பற்றி மெல்ல அசைபோடுவோம்.
நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு சொந்த ஊர் கேரளாவின் செண்டமங்களம். வளர்ந்தது தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு. ஆரம்பக்கல்வியை ஈரோட்டில் உள்ள பாரதி வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார்.
சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலை.யில் பிடெக். முடித்தார். காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
கன்னடத்தில் அக்ஷரா என்ற கேரக்டரில் தசாவாலா என்ற படத்தில் முதலில் அறிமுகமானார். இது 2013ல் வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.
தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் இவரோட முதல் படம் மன்சூர் மங்கோஸ் என்ற ரொமான்டிக் படத்தில் பகத்பாசிலுக்கு ஜோடியாக நடித்தார்.
தமிழ்ப்படம் 2 படம் இவரை தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவும் பரிச்சயமாக்கியது. ஹிப் ஹாப் தமிழாவுடன் நான் சிரித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். இந்தப்படமும் பரவலாக பேசப்பட்டது.
Gabriella: சன்…
OTT Release:…
Actor Dhanush:…
Tamil Movies:…
இந்தியாவும் இலங்கையும்…