மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சூர்யாவுடன் ஜோடி போட்டு நடிக்க, தொடர்ந்து பல படங்களிலும் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்க துவங்கினார்கள்.
காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல், மாயாவி, பேரழகன், உயிரிலே கலந்தது உள்ளிட்ட பல படங்களிலும் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். என்வே, இருவருக்குள்ளும் இடையே காதல் மலர்ந்தது. ரஜினி,கமல், சிம்பு உள்ளிட்ட பலருடனும் ஜோதிகா நடித்தார். ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி சூர்யாவை திருமணமும் செய்து கொண்டார்.
ஒரு மகள், ஒரு மகன் என அழகான குடும்பம். திருமணத்திற்கு பின்னர் நல்ல கதாபாத்திரம் என்றால் மட்டுமே நடித்துவருகிறார். சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில்லை என்றாலும் ஜோதிகா தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். தினமும் ஜிம்முக்கு செல்கிறார். தற்போது சூர்யாவும், ஜோதிகவும் மும்பையில் தங்கியிருக்கிறார்கள். அங்கேயே வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார் சூர்யா.
இந்நிலையில், ஜிம்மில் தான் வெறித்தனமாக வொர்க் அவுட் பண்ணும் வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.





