Actress Kanaga: தமிழ் சினிமாவில் எத்தனையோ பல முன்னணி நடிகைகளை நாம் கடந்து வந்தாலும் இந்த நடிகைக்கு என இப்ப வரைக்கும் ஒரு தனி க்ரேஸ் இருக்கத்தான் செய்கிறது. அவர்தான் நடிகை கனகா. கரகாட்டக்காரன் படத்தில் கனகாவை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அதுவும் இவருடைய கண்ணுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி அந்தஸ்தை பெற்ற கனகா கிட்டத்தட்ட 30 வருடமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே வாழ்ந்து வருகிறார். தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு யாரையும் பார்க்க பிடிக்காமல் அவருடைய வீட்டில் வாழ்ந்து வருகிறார். கனகாவை பற்றி ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இதையும் படிங்க: ஒரே ராத்திரியில் நடந்த சம்பவம்!.. விஜய் சும்மா ஓடிக்கிட்டே இருப்பாரு!.. பெப்ஸி விஜயன் பேட்டி!..
உதவியாளரின் காதலை தவறாக புரிந்து கொண்டு அவரை விரட்டியடித்த சம்பவம். பின் அந்த உதவியாளரின் மறைவிற்கு பிறகுதான் அவர் தன்னை காதலித்தார் என்று கனகாவுக்கு தெரிய வர அதுவே அவரை பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. அதன் பின் அவருடைய அப்பாவின் சொத்துப்பிரச்சினை என கனகாவை சுற்றி பிரச்சினைகளே வட்டமடித்துக் கொண்டிருந்தது.
ஒரு காலத்தில் ஓஹோனு வாழ்ந்த நடிகை. இப்போது யாராலும் பார்க்க முடியாத அளவு தனிமைப்படுத்திக் கொண்டாரே என ரசிகர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல் இயக்குனர் வி.சேகர் அவர் எடுத்த ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்திற்காக விவேக்குக்கு ஜோடியாக கனகாவை ஒப்பந்தம் செய்ய அவரது வீட்டிற்கு சென்றாராம். அப்போது தேவிகாதான் அவருடைய கால்ஷீட்டை பார்த்துக் கொண்டிருந்தாராம்.
இதையும் படிங்க: ‘படையப்பா’வில் நீலாம்பரி கேரக்டரால் கடுப்பான ரசிகர்! இவ்ளோ பிரச்சினைகளை சந்தித்தாரா ரம்யா கிருஷ்ணன்
தேவிகா முதலில் தயங்கினாராம். சேகர்தான் என்னை நம்பி அனுப்பி வையுங்கள். கதை நல்ல கதை என்று சொல்லி கனகாவை நடிக்க வைத்திருக்கிறார். விவேக்தான் தனக்கு ஜோடி கனகாவா? என்று குஜாலாகிவிட்டதாக வி .சேகர் கூறினார். மேலும் கனகாவின் அம்மா தேவிகா ஒரு புரட்சியாளர். அதனால்தான் ஒரு சாதாரண கூலி வேலை செய்தவரை திருமணம் செய்தார். இதுவே கனகா இப்படி ஆனதற்கு காரணம் என வி.சேகர் கூறினார்.
இதிலிருந்து அவரது அப்பா மூலமாக ஏதாவது பிரச்சினைகள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. தனக்கு என்ன ஆனது? தான் ஏன் இப்படி இருக்கிறேன் ? என்று கனகாவே வந்து சொன்னால்தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
இதையும் படிங்க: அந்த க்ரூப் எடுக்கிறதெல்லாம் படமே இல்லை!.. நாங்க எடுக்கிற படங்கள் தான் மாஸ்.. பா. ரஞ்சித் பேச்சு!..
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…