More
Categories: Cinema History Cinema News latest news

விமான பணிப்பெண்ணாக இருந்த காஞ்சனா… பிரபல இயக்குனரையே காக்க வைத்த பின்னணி…

Actress Kanchana: காஞ்சனா தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். இவர் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் முலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே இவருக்கு வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் முத்துராமன் நடித்திருந்தார். மேலும் இப்படத்தினை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கியிருந்தார்.

மேலும் காஞ்சனா தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் கொடிமலர், அதே கண்கள், காதல் ஜோதி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் இவர் தனக்கென தனி பெயரையும் சம்பாதித்தார். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ஆர்.எஸ்.மனோகருடன் இணைந்து இலங்கேஸ்வரர் எனும் நாடகத்தில் நடித்து கொண்டிருந்தார். ஆனால் அந்த நாடகத்தில் நடித்ததால் இவருக்கு தனது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:கலைஞரின் வசனத்தில் நடிக்க மறுத்த ரஜினி!.. காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!..

ஏற்கனவே வீட்டாரின் எதிப்பை மீறிதான் நாடகத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் எங்கு படிப்பு கெட்டு விடுமோ எனும் அச்சத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். பின் தனது கல்லூரியில் உடன் இருந்த தோழி நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், அதனால் நீ விமான பணிப்பெண்ணுக்கான படிப்பினை படி என அறிவுறுத்துகிறார். அதன்படி காஞ்சனாவும் விமான பணிப்பெண்ணாக ஆகிறார்.

ஒருமுறை கேரளாவிற்கு செல்லும் விமானத்தில் நடிகர் சிவாஜி கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தபோது காஞ்சனாவை விமானத்தில் பார்க்கிறார். காஞ்சனாவின் அழகையும் அவரின் ஆங்கிலம் பேசும் திறமையையும் கண்டு வியக்கிறார். பின் விமானத்தை விட்டு இறங்கும்போது காஞ்சனாவிடம் நீ மிகவும் அழகாக இருக்கிறாய்…ஆங்கிலமும் மிக அழகாக பேசுகிறாய். சினிமாவில் நடிக்கிறாயா? என கேட்டுள்ளார். அதற்கு காஞ்சனாவும் சம்மதம் கூறிவிட்டாராம்.

இதையும் வாசிங்க:போட்றா வெடிய!.. லியோ ரிலீஸ் தேதியில் திடீர் டிவிஸ்ட்!.. பி ரெடி விஜய் ஃபேன்ஸ்!…

அதே சமயம் இயக்குனர் ஸ்ரீதர் தனது படமான காதலிக்க நேரமில்லை திரைப்படத்திற்கு கதாநாயகியை தேடி அலைகிறார். கதாநாயகியை தேடி மும்பை செல்கிறார். ஆனால் அங்கு அவர் நினைத்தபடி கதாநாயகி கிடைக்கவில்லையாம். பின் திரும்ப தமிழ்நாட்டிற்கு வரும் ஸ்ரீதர் அங்கு விமானத்தில் காஞ்சனாவை பார்க்கிறார். அவர் காஞ்சனாவை பார்த்தபொழுது தனது மனதில் நினைத்து வைத்திருந்த கதாநாயகி போல் இருந்துள்ளார்.

பின் காஞ்சனாவிடம் சினிமாவில் நடிக்க வருகிறாயா? என கேட்டுள்ளார் ஸ்ரீதர். காஞ்சனாவிற்கோ ஸ்ரீதரை யாரென்று தெரியவில்லையாம். எனவே தன்னுடன் பணியாற்றும் தோழியிடம் சென்று  ‘அவர் என்னை சினிமாவிற்கு நடிக்க வருகிறாயா என கேட்கிறார்’ என கூறியுள்ளார். அதற்கு தோழி அவர் இயக்குனர் ஸ்ரீதர். இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள் என அறிவுறுத்தியுள்ளார்.

பின் காஞ்சனாவும் ஸ்ரீதரிடம் சென்று எனக்கு சம்மதம்…ஆனால் என் வீட்டில் சம்மதிக்க மாட்டார்களே.. என கூறியுள்ளார். அதற்கு ஸ்ரீதர் அதை நன் பார்த்து கொள்கிறேன் என கூறி அவரின் பெற்றோரின் சம்மதத்தை பெற்றாராம். பின் இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றியையும் சம்பாதித்து கொடுத்தது.

இதையும் வாசிங்க:முதல் சீன்லயே சிவாஜி என்ன கண்டுபிடிச்சிட்டார்!.. பல வருடங்களுக்கு பின் பார்த்திபன் சொன்ன சீக்ரெட்…

Published by
amutha raja

Recent Posts