கிரிக்கெட் வீரருடன் காதல்!.. கல்யாணமே பண்ணாமல் சிங்கிளாக இருக்க அவர் தான் காரணம்!.. மனம் திறந்த கெளசல்யா..

0
2425

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கெளசல்யா நேருக்கு நேர், ஜாலி, பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஆசையில் ஓர் கடிதம், வானத்தை போல, தை பொறந்தாச்சு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

திருமலை, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக மாறிவிட்ட கெளசல்யா 43 வயதான நிலையிலும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருவதாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது சொந்த வாழ்க்கை குறித்த விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.

இதையும் படிங்க: நல்லவேளை விஜய்சேதுபதி நடிக்கல!.. இல்லைன்னா இந்நேரம் சர்ச்சை வெடிச்சிருக்கும்.. 800 ட்ரெய்லர் ரிலீஸ்!..

நடிகைகள் பொதுவாக தன்னை பற்றிய கிசுகிசுக்கள் வந்தாலே கடுப்பாகி விடும் நிலையில், தன்னை பற்றி இப்போதும், திருமணம் பற்றி செய்தி இணையத்தில் வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏன் என்றால் மக்கள் இன்னும் தன்னை மறக்கவில்லை. ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னைப் பற்றி பேசுவது நல்லது தான் எனக்கூறி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் போது பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் காதல் என கிசுகிசுக்கள் கிளம்பின. நான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை, திருமணம் என்பது ஒரு அழகான விஷயம். எனக்கும் என் கருத்துக்கும் பிடித்தமான ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை. அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருந்தார். ஆனால் அது பிரேக் அப் ஆகிவிட்டது. அதன் பிறகு மனசுக்கு பிடிச்ச யாரையும் என்னுடன் கடைசி வரை வருவார் என்கிற நம்பிக்கையை யாரும் தராத நிலையில், திருமணமே செய்துக் கொள்ளாமல் பெற்றோர்களுடனே ஜாலியாக வாழ்ந்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சினிமா அவ்ளோ பெரிய சீன் இல்லை!.. அதை விட முக்கியமானது நிறைய இருக்கு.. பொசுக்குன்னு சொன்ன எச். வினோத்!..

நான் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால், ரொம்பவே குண்டாகி விட்டேன். எப்படி இருந்த கெளசல்யா இப்படி ஆகிட்டாரே என்றெல்லாம் கிண்டல் செய்தனர். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக பலூன் போல ஊதி விட்ட நிலையில், தான் சினிமாவில் நடிப்பதில் இருந்தே விலகி விட்டேன் எனக் கூறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

நடிகை கெளசல்யா திடீரென பேட்டிகள் கொடுத்து ஆக்டிவ் ஆகி உள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்கிறாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

google news