எம்ஜிஆரிடம் கற்றுக்கொண்ட கோவை சரளா!… சம்பாதிக்கும் பணத்தை இப்படித்தான் செலவழிக்கிறாராம்!..

முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் கோவை சரளா. இவர் செந்தில், கவுண்டமணி, விவேக், வடிவேலு என பல நடிகர்களுடன் திறமையைக் காட்டியுள்ளார். நகைச்சுவை, குணச்சித்திர வேடம் என அசத்தும் இவர் ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் வெளுத்து வாங்கி தாய்மார்களையும் கவர்ந்தவர். இதுவரை 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்து அசத்தியவர். தனிப்பட்ட முறையில் திருமணமே செய்யாமல் நடிப்பு நடிப்பு என இருந்து விட்டார்.

தன் சொந்த ஊரான கோவை பாஷையை படங்களிலும் அள்ளித் தெளித்து நக்கலும், நய்யாண்டியுமாக இவர் பேசும் வசனங்களும், அந்த கொங்கு தமிழ் உச்சரிப்பும் சிரிப்பே வராதவர்களுக்கும் வரவழைத்து விடும். இவரது அசாத்திய திறமையைக் கண்டு கொண்ட உலகநாயகன் கமலும் தனக்கு ஜோடியாக இவரை சதிலீலாவதி படத்தில் நடிக்க வைத்தார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க… தூக்கி வச்சு கொண்டாடுனாங்க.. ஆனா, ஒரே பாட்டில் காலி பண்ணிய கோட்…யுவன் கொடுத்த திடீர் ஷாக்!

இவர் பேசும் டயலாக்குகளே பஞ்சாகத் தான் இருக்கும். ஒரு படத்தில் என்ன இங்க சத்தம், என்ன இங்க சத்தம்னு சொல்வாரு. கரகாட்டக்காரன் படத்தில், என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்..னு சொல்லும் போது தியேட்டரில் சிரிக்காதவர்களே இருக்க முடியாது. இன்னொரு படத்தில் தொறை இங்கலீஷ் எல்லாம் பேசுதுன்னு சொல்வார்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகை இவர். ஒரு முறை எம்ஜிஆர் கோவை வந்த போது சரளாவை ஒருவர் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். அப்போது உனக்கு நிறைய திறமை இருக்கு… என்று சொல்லி கைநிறைய உதவித்தொகையை அள்ளி வழங்கினாராம். அந்த உதவித்தொகையில் படித்த அவர் பிற்காலத்தில் எம்ஜிஆரைப் போல நாமும் பிறரைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தாராம். தன் பள்ளிப்படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். தந்தையும், அக்காவும் சம்மதிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். சென்னைக்கு வந்தார்.

Kovai sarala

அங்கு இயக்குனர் பாக்கியராஜை சந்தித்தார். அவரது பேச்சால் பாக்கியராஜ் அசந்து போய், தனது முந்தானை முடிச்சு படத்தில் சிறு வேடம் கொடுத்து நடிக்க வைத்தாராம். அன்று அவருக்கு சரளா தான் பெயர். பத்திரிகையாளர்கள் பெயருக்கு முன் ஊரான கோவையைச் சேர்க்கலாமா என கேட்டு, அப்படியே பெயரை வைத்தார்களாம். அன்று முதல் கோவை சரளாவானார்.

வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்ன வீடு, ஜப்பானில் கல்யாண ராமன் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். காஞ்சனா வரிசைப்படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார். சகோதரி, சகோதரர்களின் பிள்ளைகளை வளர்த்து வருகிறார். ஏராளமான ஏழைக்குழந்தைகளின் படிப்பு, முதியோர் நலன்களில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago