Connect with us
viji

Cinema News

விஜயகாந்தை இவ்வளவு நாள் காப்பாத்துனதே இதுதான்! ஓ இதுக்குத்தான் யாரையும் பாக்க விடலயா?

Captain Vijaykanth: தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற தலைவராக நடிகராக நல்ல மனிதராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். அனைவரிடமும் நற்பெயரை பெற்றவர். இதுவரை விஜயகாந்தை பற்றி யாரும் எதுவும் தவறுதலாக பேசியதே இல்லை.

அந்தளவுக்கு அன்பை சம்பாதித்து வைத்திருந்தார். அவருடைய மறைவு அனைவர் தரப்பிலும் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. ஒருவர் நீண்ட நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து பின் இறந்தால் சரி அவ்ளோதான் என நினைப்போம்.

இதையும் படிங்க: குறைந்த விலை.. செம கலெக்‌ஷன்!.. முத்தழகு ஷோபனாவின் பொங்கல் ஷாப்பிங் வீடியோ! ..

ஆனால் விஜயகாந்த் விஷயத்தில் அப்படி நினைக்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் இருக்கிறார் என்ற அந்த எண்ணத்தோடு அவரது குடும்பமும் அவரது ரசிகர்களும் கட்சிக்காரர்களும் இருந்தார்கள்.ஆனால் அவர் இறந்த பிறகு ஒட்டுமொத்த தமிழ்நாடும் அல்லோலப்பட்டு வந்ததை நாம் பார்த்தோம்.

எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக ஒரு மாபெரும் கூட்டத்தை விஜயகாந்தின் மறைவில் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி ‘என்னுடைய கணவரை பிரிந்து சில ஆண்டுகள் கழித்துதான் என் கணவர் இறந்தார். ஆனாலும் அவரின் மறைவு செய்தி கேட்டு துடி துடித்துப் போனேன்.’

இதையும் படிங்க:விஜயகாந்துடன் அதிக படங்களில் நடித்த டாப் 10 நடிகைகள்!.. அசால்ட் பண்ணிய ராதிகா!..

‘ஆனால் பிரேமா விஜயகாந்த் விஜயகாந்துடனேயே இருந்து அவரது கடைசி காலம் வரை பயணித்தவர். அப்போ அவரின் மன நிலைமை எப்படி இருக்கும். விஜயகாந்தை இவ்வளவு நாள் காப்பாற்றியதே பிரேமலதாவின் தாலி பாக்கியம்தான்’ என்று குட்டி பத்மினி கூறினார்.

அதுமட்டுமில்லாமல் விஜயகாந்துக்கு நுரையீரல் சம்பந்தமான கோளாறுகள் இருந்ததினால்தான் தொற்று வந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் யாரையும் பார்க்க விடவில்லை. இதை ஒரு பெரிய செய்தியாக யாரும் பேச வேண்டாம் என குட்டிப் பத்மினி கூறினார்.

இதையும் படிங்க: இந்த டைம்ல மட்டும் விஜய்கிட்ட பேசவே முடியாது! இருந்தாலும் தளபதி ரொம்ப சூடாதான் இருப்பார் போல

google news
Continue Reading

More in Cinema News

To Top