Connect with us
lakshmi

Cinema News

ஓப்பனா ரூமுக்கு கூப்பிட்டா! நான் ஆர்த்டாக்ஸ் ஃபேமிலி.. லட்சுமியுடனான நெருக்கத்தை வெளிப்படையாக கூறிய நடிகர்

Actress Lakshmi: நடிப்பில் சாவித்ரி, பத்மினி, பானுமதி என பல நடிகைகள் தமிழ் சினிமாவில் கோலோச்சி இருந்திருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் நிச்சயமாக நடிகை லட்சுமியை நாம் நினைவு கூற வேண்டும். இவர் நடித்த பல படங்களை பற்றி நாம் பேசினாலும் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தை நாம் என்றுமே மறக்க இயலாது. அதில் லட்சுமியின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

நடிப்பில் கொடி கட்டி பறந்த லட்சுமி தன் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார். அவருக்கு மூன்று கணவர்கள் என்றும் அவருடைய வாழ்க்கையில் சில ஆண்கள் இருந்ததாகவும் முன்பே பயில்வான் ரெங்கநாதன் கூறியிருந்தார். ஆனால் அது வெறும் சர்ச்சை என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் லட்சுமியின் கணவரே இன்று அது எல்லாம் உண்மை என்பது போல சில அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 25 ஆயிரம் பாட்டு பாடியிருக்கேன்!. ஆனா இப்ப ஆயிரம் கூட பாட முடியாது!.. ஃபீல் பண்ணும் மனோ!..

லட்சுமியின் கணவரும் நடிகருமான மோகன் சர்மா மும்பையில் அவர் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாராம். அப்போது லட்சுமி மும்பைக்கு ஒரு விளம்பர படத்தில் நடிக்க வந்திருக்கிறார். உடனே லட்சுமி மோகனுக்கு போன் செய்து நான் ஷாப்பிங் போக வேண்டும். அதனால் கூட வர முடியுமா என கேட்டிருக்கிறார். மோகனும் ஒரு கால் டாக்சியை பிடித்து கடைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஒரு நாய் வடிவிலான செண்ட் பாட்டிலை மோகன் பார்த்துவிட்டு வைத்துவிட்டாராம்.

அதை லட்சுமி மோகனுக்கு தெரியாமல் வாங்கிக் கொண்டு மோகனிடம் கொடுத்து இந்த நாய் போல கடைசி வரை உங்களுக்கு நன்றியுணர்வாக இருப்பேன் என தனது காதலை சொல்லியிருக்கிறார். ஆனால் இதில் மோகனுக்கு விருப்பமே இல்லையாம். மறு நாள் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போதும் மோகன் பிடிகொடுக்காமல்தான் பேசினாராம். உடனே லட்சுமி அவருடைய ஹோட்டல் ரூமுக்கு அழைத்தாராம். எதற்கு அழைக்கிறார் என முன்பே தெரிந்து கொண்ட மோகன் லட்சுமியிடம் ‘ நான் ஒரு ஆர்த்டாக்ஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன். அதனால் திருமணத்திற்கு முன்பு உன்னிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன்’ எனச் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: இவன வச்சி என்ன பண்ணுவ?!.. கலாய்த்த நடிகை!.. வெறியேத்தி வேலை பார்த்த சிவக்குமார்!..

அதனால் அறையில் இருந்த குங்குமத்தை எடுத்து லட்சுமியின் தலையில் வைத்து அன்று கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் இவர்கள் விஷயம் வெளியே தெரியவர முறைப்படி திருமணம் செய்து கொண்டார்களாம். அப்பவே லட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி ஐஸ்வர்யா குழந்தையாக இருந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு வேறு சில ஆண்களை லட்சுமி அனுமதித்தாள் என்றும் ஒரு நாள் ஐஸ்வர்யாவே தன்னிடம் ‘அப்பா நீ இல்லாத போது அம்மா வேறு ஒரு ஆணுடன் பேசிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னதாக’மோகன் கூறினார்.

mohan

mohan

ஒரு நாள் லட்சுமியின் அம்மா ருக்மணியே மோகனிடம் ‘லட்சுமி மாதிரி ஒரு பிறவி இனிமேல் பிறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஜென்மம்’ என சொன்னாராம். அதைப் போலவே ஐஸ்வர்யாவும் வந்துவிட்டதாகவும் ஐஸ்வர்யாவுக்கும் லட்சுமிக்குமே ஆகாது என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்ததனால்தான் லட்சுமி இன்னொரு குழந்தையை தத்தெடுத்ததாகவும் பல திடுக்கிடும் தகவல்களை மோகன் கூறினார்.

இதையும் படிங்க: பின்னணி இசையால் வந்த பிரச்சனை!. சிவாஜி பட இயக்குனரை ஒதுக்கி வைத்த எம்.ஜி.ஆர்..

google news
Continue Reading

More in Cinema News

To Top