Nayanthara: கேரளாவை சேர்ந்த நயன்தாரா ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் மெல்ல மெல்ல நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார். சினிமாவில் நடிக்க துவங்கி பல வருடங்கள் சரியான வாய்ப்புகள் இல்லாமல்தான் இருந்தார். அப்போது திரிஷா முன்னணி நடிகையாக இருந்தார்.

நயன்தாராவும் திரிஷாவை போலவே தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்தார். சிம்புவுடன் காதல், பிரபு தேவாவுடன் காதல், அவருக்காக மதம் மாறியது, காதல் பிரேக்கப் என பல பரபரப்பான செய்திகளில் அடிபட்டவர். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பின் சில வருடங்கள் இருவரும் காதல் ஜோடியாக உலகை சுற்றி வந்தார்கள். 2022ம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதோடு, வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெற்றோராக மாறினார்கள். குழந்தைகளை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.

ஒருபக்கம், அவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. படங்களை தயாரிப்பது, வினியோகம் செய்வது, சொந்தமாக தொழில் செய்வது என விக்கி – நயன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அடிக்கடி குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதோடு, தன்னுடைய திருமண ஆவணப்படம் தொடர்பாக தனுஷை திட்டி நயன்தாரா வெளியிட்ட அறிக்கை சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சேலையில் கட்டழகை காட்டி புதிய புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டிருக்கிறார்.






