More
Categories: Cinema History Cinema News latest news

கல்யாணத்தினை ஏழு வருடம் மறைத்த முன்னணி நடிகை… நீங்க நினைக்கிற ஆளு இல்லங்கோ…

நடிகைகள் திருமணத்தினை ஈசியாக இப்போதே கண்டுபிடிக்க முடியாத நிலையில் 30 வருடத்திற்கு முன்னர் இதே போன்று ஒரு முன்னணி நடிகை தனது திருமணத்தினை 7 வருடமாக மறைத்து வைத்திருந்தாராம்.

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகி எனக் கூறியவுடன் சில்க்கிற்கு பின்னர் நினைவுக்கு வருபவர் டிஸ்கோ சாந்தி தான். குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவிற்குள் வந்தவர். மலையாளத்துல நடிச்ச முதல் படத்திலேயே மோகன்லாலுக்கு ஜோடியானார். அமெரிக்காவுல 40 நாள் ஷூட்டிங் நடந்தது. ஆனா, இந்தப் படம் பாதியிலேயே டிராப் ஆயிடுச்சு.

Advertising
Advertising

நடிகை

இந்த நேரத்தில் தமிழ் சினிமாவுல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட டிஸ்கோ சாந்திக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘ஊமை விழிகள்’ படத்துல வர்ற ‘ராத்திரி நேரத்துப் பூஜையில்…’ பாட்டின் மூலம் ஹிட் ஆனார். தொடர்ச்சியாக இதே போன்ற வாய்ப்புகள் குவிந்ததாம். தெலுங்கில் நடித்துக்கொண்டிருந்த போது அங்கு இவருக்கு அறிமுகமானவர் வில்லன் நடிகர் ஸ்ரீ ஹரி. தொடர்ச்சியாக இருவருக்கும் காதல் ஏற்பட்டதால் திருமணம் செய்ய குடும்பத்தினர் சம்மதித்தாலும் அதை செய்ய பொருளாதார பிரச்னை இருந்ததால் சில நாட்கள் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு எதிர்பாராத சூழலில் கோயிலில் இருக்கும் போது இவரின் கழுத்தில் தாலி கட்டிவிட்டாராம் ஸ்ரீஹரி. இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அதற்கு சாந்தி சந்தோஷமே பட்டு இருக்கிறார். உடனே தனக்கு நல்ல கணவன் அமைந்தால் தாலியை உண்டியலில் போட்டு விட்டாராம். கருகமணி ஒன்றினை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு இருக்கிறார்.

டிஸ்கோ சாந்தி

இந்த தகவலை ஏழு வருடமாக மறைத்து வைத்தாராம். நல்ல செட்டில் ஆன பிறகே அனைவரையும் அழைத்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

Published by
Akhilan

Recent Posts