Connect with us
mohanlal

Cinema News

பாலியல் புகார்!.. நடிகர்களுக்கு முதுகெலும்பே இல்லை!.. விளாசிய நடிகை!…

Mohanlal: நடிகர்கள் மீதான பாலியல் புகார்கள் இப்போது மலையாள சினிமா உலகில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதில் சிக்கியிருப்பது எல்லோருமே சீனியர் நடிகர்கள்தான். சித்திக், முகேஷ் போன்ற சீனியர் நடிகர்கள் சிக்கியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு கேரள திரையுலகில் நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி என ஒன்று அமைக்கப்பட்டது. அதுபற்றி பல நடிகைகளிடம் விசாரித்த கமிட்டி இறுதியாக அறிக்கையை தாக்கல் செய்தது. சமீபத்தில்தான் அதில் என்ன இருக்கிறது என்பது வெளியே கசிந்தது.

இதையும் படிங்க: விஜயகாந்த்தான் நடிக்கனும்னு கட்டாயம் ஏன்! அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்

ஹேமா கமிட்டி வெளியானதால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் துணிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகிறார்கள். இதில்தான், சித்திக், முகேஷ், ஜெய சூர்யா, பாபு ராஜ், முகேஷ், மணியன் பிள்ளி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், நடிக்ர் சித்திக் அம்மா என அழைக்கப்படும் நடிகர் சங்கத்தில் முக்கிய பதவியில் இருந்தவர். இந்த விவகாரம் வெளியே வந்ததும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட பலரும் அந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்கள்.

Padmapriya

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் மோகன்லால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்ததற்கு நடிகை பார்வதி போன்ற சிலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், நீதித்துறையும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும் என கூறினார் மோகன்லால்.

இந்நிலையில், தமிழில் பட்டியல், மிருகம், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், தங்க மீன்கள் போன்ற படங்களில் நடித்த பத்மபிரியா ‘மலையாள நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது. எதுவுமே தெரியாதது போல் பேசும் மோகன்லால், மம்முட்டியின் கருத்துகள் எனக்கு ஏமாற்றத்தையே தருகிறது’ என சொல்லி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top