Entertainment News
மனசுக்குள்ள சின்ன பொண்ணுன்னு நினைப்பா!…கவுன போட்டு கவுத்த பிரியாமணி…
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.
ஆனாலும், அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார்.
முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.
சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவுன் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.