Entertainment News
இதென்ன கண்ட்றாவி!…காலை தூக்கி கண்டபடி போஸ் கொடுத்த பிரியாமணி….
தமிழில் சில திரைப்படங்களை நடித்தவர் பிரியாமனி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்தியன் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
இயக்குனர் பாரதிராஜாதான் பிரியாமணியை அறிமுகப்படுத்தினார். பாலுமகேந்திர இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக அவரை நடிக்கவைக்க விரும்பவில்லை. எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். எனவே, வித்தியாசமான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.